News October 13, 2025
IPL-ல் இருந்து ஓய்வு பெறும் கோலி?

IPL-ல் இருந்து கோலி விரைவில் ஓய்வு பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. RCB அணியுடன் விளம்பர ஒப்பந்தம் செய்துள்ள முன்னணி பிராண்ட் ஒன்று, கோலியை விளம்பர தூதராக ஒப்பந்தம் செய்ய அணுகியுள்ளதாம். ஆனால், பிற வீரர்களுக்கு அந்த ஒப்பந்தத்தை கொடுக்க அவர் அறிவுறுத்தினாராம். அடுத்த மெகா ஏலம் நடக்கும் போது அவருக்கு 38 வயதாகியிருக்கும். இதனால், இன்னும் 2 சீசன்களில் மட்டுமே விளையாடுவார் என்று கூறப்படுகிறது.
Similar News
News December 12, 2025
திருப்பரங்குன்றத்தால் திருப்பம் வரும்: நயினார்

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் வாக்குவங்கிக்காகவே கோர்ட் தீர்ப்பை திமுக மதிக்கவில்லை என்று நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். கருத்து கணிப்புகளில் கூட திமுக ஆட்சி மிகவும் பின் தங்கியுள்ளதாக கூறிய அவர், 2026 தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி தான் வெற்றிபெறும் என்று குறிப்பிட்டார். திருப்பரங்குன்றம் விவகாரத்தால், இந்த ஆட்சிக்கே திருப்பம் வரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News December 12, 2025
மக்கள் நாயகன் காலமானார்

‘பறவை மனிதர்’ என அன்போடு அழைக்கப்பட்ட ஜோசப் சேகர் காலமானார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனது வீட்டின் மொட்டை மாடியில் இவர் அளிக்கும் உணவுக்காகவே தினந்தோறும் ஆயிரக்கணக்கான பறவைகள் குறிப்பாக கிளிகள் தேடி வரத்தொடங்கின. 20 ஆண்டுகளாக இந்த உன்னத பணியை செய்து வந்த அவர், கொரோனா காலத்தில் ஏழை எளிய மக்களுக்கும் உணவு அளித்து மக்களின் நாயகன் ஆனார். ஜோசப் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIP
News December 12, 2025
தாயின் சாதி அடிப்படையில் சாதி சான்றிதழ்: SC

இந்தியாவில் தந்தையின் சாதியை பொறுத்தே குழந்தைகளுக்கு சாதி சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்நிலையில், வழக்கு ஒன்றில் சிறுமியின் எதிர்காலத்தை பாதுகாக்கும் விதமாக தாயின் சாதி அடிப்படையில் சான்றிதழ் வழங்க SC உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு, இந்த குறிப்பிட்ட வழக்கிற்கு மட்டுமே பொருந்தும் என நீதிபதி கூறினாலும், எதிர்காலத்தில் விதிகளில் மாற்றத்தை ஏற்படுத்த முன்னுதாரணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


