News July 12, 2024
சிபிஐ விசாரிக்க பாஜக கோருவது ஏன்?: திருமா

ஆம்ஸ்ட்ராங் கொலையை சிபிஐ விசாரிக்க வேண்டும் என பாஜக சொல்வது ஏன் என திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த கொலை வழக்கில் ஆருத்ரா நிறுவனத்தின் பெயர் அடிபடிவதாகவும், ஆருத்ரா நிதி நிறுவன மோசடியில் தொடர்புடையவர்கள் பாஜகவில் பொறுப்பில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், முன்னாள் முதல்வர் கருணாநிதியை கொச்சைப்படுத்தி பதற்றத்தை உருவாக்க சிலர் முயற்சிப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Similar News
News July 9, 2025
ஸ்மார்ட் போன்கள் விலை குறைய வாய்ப்பு!

4G, 5G ஸ்மார்ட் போன்களின் விலைகளை நிறுவனங்கள் குறைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. One Plus, iQOO, Leomi, Realme உள்ளிட்ட நிறுவனங்களில் பெருமளவு செல்போன்கள் தேங்கியுள்ளன. ரக்ஷா பந்தன், சுதந்திர தினம் தொடங்கி அடுத்தடுத்து பண்டிகைகள் வர உள்ளதால் பண்டிகைகளுக்கு முன்பே கையிருப்பில் உள்ள செல்போன்களை சலுகையில் விற்பனை செய்துவிட நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. உங்கள் பட்ஜெட் என்ன?
News July 9, 2025
பரந்தூர் விவகாரம்: நிலம் வழங்கியோருக்கு இழப்பீடு

பரந்தூர் விமான நிலையம் அமைக்க இடம் கொடுத்த நில உரிமையாளர்கள் 19 பேருக்கு இன்று இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் ஆட்சியர் நடத்திய பேச்சுவார்த்தையில் பரந்தூர், பொடவூர், நெல்வாய், வளத்தூர், அக்கம்மாபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 19 பேர் நிலத்தை கொடுக்க ஒப்புக்கொண்டனர். அதன்படி 17 ஏக்கர் நிலம் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்திற்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டது.
News July 9, 2025
13 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

இன்று (ஜூலை 9) இரவு 7 மணி வரை மழை பெய்யக்கூடிய மாவட்டங்கள் பட்டியலை IMD வெளியிட்டுள்ளது. அதாவது, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், தி.மலை, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, திண்டுக்கல்லில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது. வேலூர், திருப்பத்தூர், நீலகிரி, நெல்லையில் லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக IMD தெரிவித்துள்ளது.