News March 25, 2024

ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தது ஏன்?

image

மோடியை மூன்றாவது முறையாக பிரதமராக்க தொண்டர்களோடு தொண்டராக துணை நிற்கவே ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ததாக தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை பகுதி மக்கள் மேலும் வளர்ச்சி அடையவும், தொழில் வளர்ச்சியிலும் தொழில் நுட்ப வளர்ச்சியிலும் தென்சென்னை வீறுநடைபோடவும் ராஜினாமா செய்ததாகவும் அவர் கூறினார். மேலும், ஆளுநராக இருந்த தான் அக்காவாக திரும்பி வந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

Similar News

News November 12, 2025

BREAKING: கனமழை வெளுத்து வாங்கும்

image

தமிழ்நாட்டில் இன்று, நவ.17, 18 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யக்கூடும் என IMD எச்சரித்துள்ளது. இன்று குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களிலும், 17-ம் தேதி தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும், 18-ம் தேதி ராமநாதபுரம், புதுகோட்டை உள்ளிட்ட 6 மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என்று அலர்ட் கொடுத்துள்ளது.

News November 12, 2025

CINEMA ROUNDUP: மீண்டும் நடிக்க தயாரான அமலா பால்

image

*முனீஷ்காந்தின் ‘மிடில் கிளாஸ்’ படத்தின் டிரெய்லர் வெளியானது *‘தேரே இஷ்க் மே’ படத்தின் புரமோஷனில் பிஸியாக உள்ள தனுஷ் *தனுஷின் அக்கா மகன் பவிஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் இன்று மாலை வெளியாகிறது *மீண்டும் படங்களில் நடிக்க கதை கேட்டு வருகிறார் அமலாபால் *ரிலீஸுக்கு தயாராகிறது வெங்கட் பிரபுவின் பார்ட்டி * சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 15 மில்லியனை கடந்தது.

News November 12, 2025

அமெரிக்காவால் இந்தியாவுக்கு ‘ஜாக்பாட்’

image

H-1B விசா கட்டண உயர்வு, குடியேற்ற விதிகள் கடுமையாக்கம் உள்ளிட்டவற்றால் அமெரிக்காவின் முக்கிய நிறுவனங்கள் இந்தியாவுக்கு படையெடுத்து வருகின்றன. Wall Street, ஜேபி மார்கன் உள்ளிட்ட பல நிறுவனங்கள் தங்களது நிதி மற்றும் தொழில்நுட்ப பணிகளை, பெங்களூரு, ஹைதராபாத், குருகிராம், மும்பை ஆகிய நகரங்களுக்கு மாற்றி வருகின்றன. இதனால், இந்திய இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!