News August 18, 2025

இந்த நான்கு பேரில் யாரை சேர்க்கலாம்?

image

ஆசிய கோப்பைக்கான இந்திய அணி தேர்வு சூடுபிடித்துள்ளது. அணி தேர்வு மும்முரமாக நடைபெற்று வரும் சூழலில், 15 பேர் கொண்ட அணியில், இன்னும் ஒரு வீரரை மட்டுமே தேர்ந்தெடுக்க முடியாமல் தேர்வு குழு திணறி வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. அந்த இடத்திற்கான பரிசீலனையில் ஸ்ரேயஸ் ஐயர், ரிங்கு சிங், ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் உள்ளனராம். நீங்க சொல்லுங்க இவர்களில் யாரை டீமில் சேர்க்கலாம்?

Similar News

News December 10, 2025

சுபகாரியங்களுக்கு வாழை மரம் கட்டுவது ஏன்?

image

சுபகாரியங்கள் நடைபெறும் இடங்களிலும், கல்யாண வீடுகளிலும் முகப்பு பந்தலில் வாழை மரம் கட்டுவது தமிழர்களின் வழக்கம். அதில் வாழைப்பழ குலையும் தொங்கும். இதற்கான காரணம் தெரியுமா? வாழையடி வாழையாக குலம் தழைத்து வாழவேண்டும் என்ற அடிப்படையில் அவ்வாறு செய்யப்படுகிறது. மேலும், வாழையின் இலை, பூ, காய், கனி என எல்லாமும் பயன்படுவது போல, நாமும் பயனுள்ள வாழ்க்கையை வாழ வேண்டும் என்பது அர்த்தமாகும்.

News December 10, 2025

வார்னிங்: ஆதார் ஜெராக்ஸ் கொடுக்க வேண்டாம்..

image

ஹோட்டல் ரூம் புக்கிங் உள்பட சில நிறுவனங்கள், ஆதார் நகலை பெற்று சேமித்து வைக்கும் பழக்கத்தை கொண்டுள்ளன. இதனால் தரவுகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாவதாக UIDAI கருதுகிறது. இந்நிலையில், இனி எந்தவொரு இடத்திலும் நீங்கள் ஆதார் அட்டை நகலை கொடுக்க வேண்டாம். அதற்கு பதிலாக QR கோட் ஸ்கேனிங், பயோமெட்ரிக் உள்ளிட்ட ஆன்லைன் செயல்பாடுகள் மூலம் ஆதார் சரிபார்க்கப்படும். இந்த செயல்முறை விரைவில் அமலுக்கு வரவுள்ளது.

News December 10, 2025

சர்க்கரை நோயை அதிகரிக்கும் காற்று மாசு!

image

சிகரெட், மது, எய்ட்ஸ், காசநோய் போன்ற காரணங்களால் இறப்பவர்களை விட, காற்று மாசால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை அதிகம் என்று டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். மாசுபட்ட காற்றில் உள்ள PM 2.5 நுண்துகள்கள், ரத்தத்தில் இன்சுலினை அதிகரித்து, சர்க்கரை நோயை உண்டாக்குகிறதாம். தாய் வயிற்றிலிருக்கும் போதே, கடைசி 3 மாதங்களில் காற்று மாசால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு, பிற்காலத்தில் high BP ஏற்படும் ஆபத்து அதிகமாம்.

error: Content is protected !!