News October 18, 2025
பிறந்த குழந்தையை எப்போது தூளியில் போடணும்?

பிறந்த குழந்தையை தூங்க வைக்க காலங்காலமாக நாம் பயன்படுத்துவது தூளிதான். ஆனால், இதில் சில விஷயங்களை கவனிக்க வேண்டும் என டாக்டர்கள் கூறுகின்றனர். குழந்தை பிறந்து 2 வாரங்களுக்கு பின்பே தூளியில் போடவேண்டுமாம். மேலும், குழந்தை பிறந்து 6 மாதங்களுக்கு பிறகு தூளி பயன்படுத்துவதை குறைப்பது நல்லதாம். குழந்தையை சீக்கிரம் தூங்க வைக்க தூளியை வேகமாக ஆட்டக்கூடாது என்றும் அறிவுறுத்துகின்றனர். SHARE.
Similar News
News December 7, 2025
இதற்கு அண்ணாமலை ஆவண செய்வாரா? பெ.சண்முகம்

திருப்பரங்குன்றம் மலை இந்துக்களுக்கானது என அண்ணாமலை கூறியிருந்தார். இந்நிலையில், இந்துக்கள் என்பது அனைத்து இந்துக்களுக்கு மட்டுமா (அ) குறிப்பிட்ட சாதி இந்துக்களுக்குமா என CPM பெ.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார். இந்துக்கள் என்று சொல்லி எத்தனை காலத்துக்கு ஏமாற்றி பிழைப்பீர்கள் என்றும் சாடியுள்ளார். கருவறைக்குள் பட்டியலின இந்துக்கள் பூஜை செய்ய அண்ணாமலை ஆவண செய்வாரா என்றும் சண்முகம் கேட்டுள்ளார்.
News December 7, 2025
கள்ளக்காதல் என்ற ஒன்று இல்லை: சேரன்

பெண்ணைதான் காதலிக்க வேண்டும் என்று இல்லை, எந்த ஒரு உயிரின் மீது அன்பு வைத்தாலும் அது காதல்தான் என இயக்குநர் சேரன் தெரிவித்துள்ளார். புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர், காதலில் நல்ல காதல், கள்ளக்காதல் என்றெல்லாம் இல்லை எனவும் விளக்கம் கொடுத்தார். சமூகம் நம் மீது செலுத்தும் ஆதிக்கம்தான் கள்ளக்காதல் எனவும், யாரை காதலிக்க வேண்டும் என்று தோன்றுகிறதோ காதலித்து விடுங்கள் என்றும் கூறியுள்ளார்.
News December 7, 2025
புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கும் 4 ராசிகள்

2026-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்க உள்ள நிலையில், ஜோதிடத்தில் நம்பிக்கையுள்ள பலரும் தங்களது ராசிக்கான பலன்களை ஆராயத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில், பிரபல ஜோதிடர் வீனஸ் பாலாஜி வரும் புத்தாண்டில் ரிஷபம், கன்னி, விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கும் என கணித்துள்ளார். குறிப்பாக கன்னி ராசியின் 11-வது இடத்தில் குரு உச்சமடைய உள்ளதால் அதீத நன்மை என தெரிவித்துள்ளார். இதில் உங்கள் ராசி உள்ளதா?


