News March 26, 2024
இன்று ஏபிவிபி-க்கு நடந்தது நாளை பாஜகவுக்கு நடக்கும்

இந்திய மக்கள் பாஜகவை தூக்கி எறியும் நாள் விரைவில் வரும் என அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். காஞ்சியில் பேசிய அவர், “டெல்லி JNU பல்கலை.யில் இடதுசாரி மாணவர் அமைப்பு வெற்றி பெற்றுள்ளது. பாஜகவின் ஏபிவிபி படுதோல்வி அடைந்துள்ளது. அதைப்போல தமிழ்நாட்டு மக்களும் பாஜகவை புறந்தள்ள வேண்டும். வரும் ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவில் பாஜக இல்லாத இந்தியா அமையும், அதுவே நம்முடைய லட்சியம்” என்றார்.
Similar News
News November 8, 2025
ECI அதிகாரிகளுக்கு பிரியங்கா காந்தி பகிரங்க எச்சரிக்கை

பிஹாரில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரியங்கா காந்தி, ஞானேஷ் குமார் உள்ளிட்ட ECI தலைமை அதிகாரிகளுக்கு நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளார். பொதுமக்களின் வாக்குகளை திருடி துரோகம் இழைத்த ECI அதிகாரிகளை மக்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள் என அவர் கூறியுள்ளார். மேலும், நிம்மதியாக பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிடலாம் என நினைத்தால், அது ஒருபோதும் நடக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
News November 8, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (நவ.8) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க..
News November 8, 2025
சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு கெளரவம்

கோவாவில் 56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா, வரும் நவம்பர் 20 முதல் 28-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தியத் திரைப்பட விழாக்களில் முதன்மையான இவ்விழாவில் நாட்டின் முக்கிய திரைக்கலைஞர்கள் கெளரவிக்கப்படுவார்கள். இந்நிலையில், விழாவின் நிறைவு நிகழ்ச்சியில், ரஜினிகாந்த் கெளரவிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதால், ரஜினிக்கு இந்த கெளரவம் வழங்கப்படுகிறது.


