News August 5, 2024

வயநாடு நிலச்சரிவு பலி 400ஆக உயர்ந்தது

image

வயநாடு நிலச்சரிவில் பலியானோரின் எண்ணிக்கை 400ஐ கடந்துள்ளது. கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில், ஜூலை 29ஆம் தேதி நிகழ்ந்த பயங்கர நிலச்சரிவில், சூரல்மலை, முண்டக்கை உள்பட 3 கிராமங்கள் மண்ணில் புதைந்தன. இடிபாடுகளில் சிக்கியவர்களில் இதுவரை 400 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மாயமானவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. உதவிக்கு 04936 204151, 95268 04154, 80784 09770 என்ற எண்களில் அழைக்கவும்.

Similar News

News January 14, 2026

அறுவடை திருநாளை அன்புடன் வரவேற்போம் ❤️❤️

image

தமிழர்களின் பண்பாட்டு பெருவிழாவான பொங்கல் பண்டிகையை வரவேற்கும் திருநாளாக போகி பண்டிகை உள்ளது. பழையன கழிதலும், புதியன புகுதலுமாக நமது முன்னோர்கள் நமக்கு வழங்கியுள்ள இத்திருநாளில், பழைய துன்பங்கள் நீங்கி, புதிய தொடக்கத்தை தொடங்க Way2News வாசகர்களை வாழ்த்துகிறோம். அறுவடை திருநாளின் ஆரம்ப நாளில் அன்பு, சகோதரத்துவம், மனிதநேயம் பொங்கும் பொங்கலை வரவேற்போமாக.

News January 14, 2026

IND vs NZ: இன்று த்ரில்லுக்கு பஞ்சமிருக்காது!

image

இந்தியா Vs நியூசிலாந்து இடையே 2-வது ODI போட்டி இன்று பிற்பகல் 1:30 மணிக்கு நடைபெற உள்ளது. 3 போட்டிகளை கொண்ட இந்த தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி வென்ற நிலையில், இன்றைய போட்டியிலும் வென்றால் தொடரை கைப்பற்றும். தொடரை இழக்கும் வாய்ப்பு இருப்பதால் நியூசிலாந்து இன்று கடுமையாக போராடும். எனவே பரபரப்பான ஆட்டத்திற்கு பஞ்சமிருக்காது. எந்த அணி வெல்லும் என நினைக்கிறீங்க கமெண்ட் பண்ணுங்க.

News January 14, 2026

தெருநாய்களை கொல்வதாக தேர்தல் வாக்குறுதி!

image

தெலங்கானாவில் சமீபத்தில் கிராம பஞ்சாயத்துக்கான உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அப்போது, பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் தெருநாய்களை கொல்வோம் என பல வேட்பாளர்கள் தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தனர். தற்போது வெற்றி பெற்றதும், தெருநாய்களை பஞ்சாயத்து தலைவர்கள் தேடி தேடி கொன்று வருகின்றனர். அந்த வகையில், கடந்த ஒருவாரத்தில் மட்டும் 500 தெருநாய்கள் கொல்லப்பட்டதாக கூறி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

error: Content is protected !!