News August 19, 2024
Way2News எதிரொலியால் மழைநீர் வடிகால் மூடும் பணி தீவிரம்

திருத்துறைப்பூண்டி வட்டம், உதயமார்த்தாண்டபுரம் ஊராட்சியில் மழைநீர் வடிகால் கட்டி மூடப்படாமல் இருந்த நிலையில், இதுகுறித்து நேற்று (ஆகஸ்ட்.18) Way2News செயலியில் செய்தி வெளியாகியது. அதன் எதிரொலியாக இன்று உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் மழைநீர் வடிகாலை மூடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Similar News
News January 19, 2026
திருவாரூர்: கடன் தொல்லை நீங்க இங்கு போங்க!

திருவாரூரில் மிகவும் பிரசித்தி பெற்ற தியாராஜர் கோவில் அமைந்துள்ளது. இக்கோயில் மூலவர்களாக தியாகராஜர், வன்மீகநாதர், புற்றிடங்கொண்டார் ஆகியோர் அருள் பாலிக்கின்றனர். இக்கோவில் சென்று மூலவர்களில் ஒருவரான வன்மீகநாதரரை வழிபட்டால், வாழ்வின் கடன் நீங்கி செல்வ செழிப்புடன் வாழ்க்கை மேம்படுட்டு, பாவங்கள் நீங்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. உங்க நண்பர்களுக்கு இதை மறக்காமல் SHARE பண்ணுங்க..
News January 19, 2026
திருவாரூர்: இனி வாட்ஸ்ஆப் மூலம் சான்றிதழ்கள்!

திருவாரூர் மக்களே பிறப்பு/இறப்பு சான்றிதழ், வருமான சான்று, பட்டா, சொத்துவரி, வேளான் திட்டங்கள், மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் மின்சாரக் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட அரசு சேவைகளை இனி வாட்ஸ்அப் மூலமாகவே எளிதாகப் பெறலாம். இதற்கு உங்களது வாட்ஸ்ஆப்பில் இருந்து ‘78452 52525’ என்ற எண்ணிற்கு ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும். இத்தகவலை தெரிந்துகொள்ள அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News January 19, 2026
திருவாரூர்: பொதுமக்களுக்கான ஓவிய போட்டி அறிவிப்பு

அரசு சார்பில் திருக்குறள் வாரம் கொண்டாடுவதையொட்டி, பொதுமக்களுக்கான திருக்குறள் ஒப்புவித்தல் மற்றும் திருக்குறள் சார்ந்த ஓவியப் போட்டி நாளை (ஜன.20) திருவாரூர் கஸ்தூரிபா காந்தி மேல்நிலைப் பள்ளியில் காலை 10:30 மணி முதல் நடைபெற உள்ளது. மேலும் முதல் பரிசு 5000 ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டியில் பங்கேற்க விரும்புவோர் ஆதார் அட்டை நகலுடன் நேரில் சென்று பங்கேற்கலாம் என மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.


