News November 18, 2024

சபரிமலை ஐயப்பன் சிலை சென்னையில் இருந்ததா?

image

சபரிமலையில் 1952’இல் தீவிபத்து ஏற்பட்டது. இதனால், புதிய ஐயப்பன் சிலை செய்யப்பட்டு, பல இடங்களுக்கு புனித யாத்திரையாக கொண்டு செல்லப்பட்டது. அப்படி சென்னை மண்ணடி கச்சாலீஸ்வரர் கோயிலுக்கு சிலை வந்தபோது, மீண்டும் சபரிமலைக்கு கொண்டு செல்ல தேவஸ்தானம் தரப்பில் சற்று காலதாமதமானது. இதன் காரணமாக, 3 நாட்கள் ஐயப்பன் சிலை கோயிலில் வைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Similar News

News December 12, 2025

சபரிமலையில் மேலும் ஒரு தமிழர் உள்பட 19 பேர் மரணம்

image

சபரிமலைக்கு சென்ற தமிழகத்தை சேர்ந்த மேலும் ஒரு பக்தர் உயிரிழந்துள்ளார். காஞ்சிபுரத்தை சேர்ந்த செல்வமணி(40) என்ற பக்தர் மலைப்பாதையில் மயங்கி விழுந்த போது உயிர் பிரிந்துள்ளது. நவ.16-ல் நடை திறக்கப்பட்ட நிலையில், TN-ல் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் சபரிமலை கோயிலுக்கு சென்று வருகின்றனர். நடப்பு சீசனில் கோவை, கடலூரை சேர்ந்த பக்தர்கள் உட்பட 19 பேர் மாரடைப்பு மற்றும் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளனர்.

News December 12, 2025

CINEMA 360°: ‘சிறை’ படத்தின் டிரெய்லரை வெளியிடும் தனுஷ்

image

*சசிகுமாரின் ‘MY LORD’ படத்தின் 2-வது சிங்கிள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. *ஆர்யாவின் பிறந்தநாளையொட்டி, அவரது 40-வது படத்திற்கான பூஜை நேற்று நடைபெற்றது. *விக்ரம் பிரபுவின் ‘சிறை’ படத்தின் டிரெய்லர் இன்று மதியம் 12.12 மணிக்கு தனுஷ் வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. *விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் ‘கொம்புசீவி’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

News December 12, 2025

BREAKING: வங்கிக் கணக்கில் ₹1,000 வந்தது

image

மகளிர் உரிமைத்தொகை ₹1,000 புதிதாக 17 லட்சம் பேரின் வங்கிக் கணக்கில் சற்றுமுன் வரவு வைக்கப்பட்டது. ஏற்கெனவே 1 கோடியே 13 லட்சம் பேர் பயன்பெற்று வரும் நிலையில், இன்று முதல் மேலும் 17 லட்சம் பேருக்கு வழங்கப்படுகிறது. ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் விண்ணப்பித்த பெண்கள் தங்களது செல்போன் எண்ணுக்கு ₹1,000 வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை உடனே செக் பண்ணுங்க. உங்கள் அக்கவுண்டுக்கு ₹1,000 வந்ததா?

error: Content is protected !!