News June 16, 2024
ஜூன் 30 முதல் மீண்டும் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி

பிரதமர் மோடியின் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி, ஜூன் 30 முதல் மீண்டும் தொடங்குகிறது. 2014இல் பிரதமரானது முதல், ஞாயிறுதோறும் வானொலி மூலம், ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் அவர் பேசி வருகிறார். அவ்வாறு பேசும்போது, சமூகத்தில் பல்வேறு விஷயங்களில் சாதித்தவர்களை வானொலி மூலம் பாராட்டுவார். இந்த நிலையில், 3ஆவது முறையாக பிரதமராக பொறுப்பேற்ற பிறகு, அவர் பேச உள்ள முதல் வானொலி உரை ஜூன் 30 ஒலிபரப்பப்பட உள்ளது.
Similar News
News January 22, 2026
நான் திமுகவிலா.. வெல்லமண்டி நடராஜன்

வைத்திலிங்கம் நேற்று திமுகவில் இணைந்தார். அவருடன் வெல்லமண்டி நடராஜனும் திமுகவில் இணையப்போவதாக தகவல் வெளியாகிய நிலையில், அவர் இணையவில்லை. இதுகுறித்து பேசிய அவர், நான் திருச்சியில் தான் இருக்கிறேன். எனக்கு திமுகவில் சேரும் எண்ணம் இல்லை. OPS உடன் தொடர்ந்து பயணிப்பேன் என்று அவரது ஆதரவு யாருக்கு என்பதை தெளிவுப்படுத்தினார்.
News January 22, 2026
தமிழகத்தில் சிக்குன்குனியா பரவல் அதிகரிப்பு

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சிக்குன்குனியா பரவல் அதிகரித்துள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் கண்காணிப்பை தீவிரப்படுத்த ஹாஸ்பிடல்களுக்கு பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. காய்ச்சல், இருமல், உடல்வலி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள ஹாஸ்பிடலுக்கு செல்லுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொசு உற்பத்தியை தடுக்க வீடுகளில் நீர் தேங்காமல் தடுப்பது அவசியம்.
News January 22, 2026
சிறு, குறு தொழில்களுக்கு கடன் வழங்க நடவடிக்கை

மத்திய அரசு, இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கிக்கு (SIDBI) ₹5,000 கோடி பங்கு மூலதன ஆதரவை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இது, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (MSME) கடன் வழங்குவதை மேம்படுத்தவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் உதவும். இதனால், சொந்த தொழில் தொடங்குபவர்களின் எண்ணிக்கை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


