News November 14, 2025
VOC துறைமுகத்தில் அக்டோபர் மாத ஏற்றுமதியில் 8.52% வளர்ச்சி!

தூத்துக்குடி VOC துறைமுகம் 2025 அக்டோபர் மாதத்தில் குறிப்பிடத்தக்க சாதனையைப் பதிவு செய்துள்ளது. மொத்த 20,584 TEUs ஏற்றுமதி கன்டெய்னர்களில் 17,506 TEUs Direct Port Entry (DPE) முறையில் செயல்படுத்தப்பட்டதாக துறைமுகம் தெரிவித்துள்ளது. இது கடந்த காலத்தை ஒப்பிடும்போது 8.52% வளர்ச்சியை காட்டுகிறது. கடல் வர்த்தகத்தை எளிமைப்படுத்தும் பணிகளில் துறைமுகத்தின் செயல்திறன் உயர்ந்துள்ளது என அதிகாரிகள் கூறினர்.
Similar News
News December 12, 2025
தூத்துக்குடி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

தூத்துக்குடி மக்களே பருவநிலை மாற்ற காலங்களில் வீடுகள், அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனி, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன்மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News December 12, 2025
தூத்துக்குடி: ரேஷன் கார்டு இருக்கா.? முக்கிய அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் ரேஷன் கார்டு குறித்த குறைதீர் முகாம் நாளை (13.12.2025) நடக்கிறது. வட்டாட்சியர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களில், நாளை காலை 10 முதல் மதியம் 1 மணி வரை முகாம் நடைபெறும். இம்முகாமில் புதிய குடும்ப அட்டை விண்ணப்பித்தல், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், பெயர், முகவரி திருத்தம் போன்றவை குறித்து மனுக்கள் அளிக்கலாம். தெரியாதவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.
News December 12, 2025
தூத்துக்குடி: பார்சலில் வந்த 112 கிலோ புகையிலை

தூத்துக்குடி தென்பாகம் போலீசருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, செய்துங்கநல்லூர் அருகே உள்ள ஒரு தனியார் பார்சல் சர்வீஸ் குடோனில் நேற்று திடீர் சோதனை செய்தனர். அப்போது, பெங்களூரில் இருந்து 5 பார்சல்களில் 112 கிலோ புகையிலை பொருள்கள் வந்தது தெரிய வந்தது. இதனை பறிமுதல் செய்த போலீசார், இந்த பார்சல்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


