News August 8, 2025
இந்திய இறக்குமதியை நிறுத்திய US நிறுவனங்கள்?

டிரம்பின் 50% வரி விதிப்பால் வால்மார்ட், அமேசான் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்திய இறக்குமதியை நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆடைகள் ஏற்றுமதியை நிறுத்தி வைக்குமாறு இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு அந்நிறுவனங்கள் கடிதம் எழுதியுள்ளதாம். இந்தியாவிலிருந்து அதிக விலைக் கொடுத்து வாங்க அவர்கள் விரும்பவில்லை. இதனால் இந்தியா ஜவுளி ஏற்றுமதியில் தனது ஆர்டர்களை மற்றவர்களிடம் இழக்கும் நிலை உள்ளது.
Similar News
News November 14, 2025
பிஹாரில் இன்று வாக்கு எண்ணிக்கை.. வெல்வது யார்?

பிஹார் சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. பெரும்பாலான கருத்து கணிப்புகளில் NDA கூட்டணியே ஆட்சியை பிடிக்கும் என கூறப்பட்டிருந்தாலும், தாங்கள் தான் ஆட்சியை பிடிப்போம் என எதிர்க்கட்சிகளும் கூறிவருகின்றன. அதனால் இன்று பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. இது தவிர, தெலங்கானா, ஒடிஷா, ராஜஸ்தான் உள்ளிட்ட 6 மாநிலங்களில் நடந்த 8 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகளும் இன்று வெளியாக உள்ளன.
News November 14, 2025
லியானர்டோ டாவின்சி பொன்மொழிகள்

*ஞானம் இல்லாத ஒரு புத்திசாலி மனிதன், வாசனை இல்லாத ஒரு அழகான பூவைப் போன்றவன். *நான் ஏழை இல்லை. அதிகமாக ஆசைப்படுபவர்களே ஏழைகள். *நேராக நடப்பவர் அரிதாகவே விழுகிறார். *ஒழுக்கமே நமது உண்மையான செல்வம். *யார் மீதும் நம்பிக்கை வைக்காதவன் ஒருபோதும் ஏமாறமாட்டான். *தீமையை தண்டிக்காமல் இருப்பது அதை அங்கீகரிப்பதற்குச் சமமாகும். *ஒரு நாளில் பணக்காரனாக விரும்புகிறவன் ஒரு வருடத்தில் தூக்கிலிடப்படுவான்.
News November 14, 2025
அமைச்சருக்கு எதிரான அவதூறு வழக்கு வாபஸ்

தெலங்கானா முன்னாள் CM மகன் KTR-ஐயும், நடிகை சமந்தாவையும் இணைத்து, அம்மாநிலத்தின் தற்போதைய அமைச்சர் கொண்டா சுரேகா 2024-ல் பேசியது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, தங்களது குடும்பத்தின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக கூறி, நடிகர் <<14263995>>நாகர்ஜூனா<<>> அவதூறு வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்நிலையில், சுரேகா பொதுவெளியில் மன்னிப்பு கோரியதை அடுத்து, நாகர்ஜுனா தற்போது வழக்கை வாபஸ் பெற்றுள்ளார்.


