News November 19, 2025

UPI-ல் கடன் வழங்க தயாராகும் தனியார் வங்கிகள்

image

தற்போது UPI வாயிலாக மூன்றாம் தரப்பு செயலிகள் கடன் வழங்கி வருகின்றன. இதன் வட்டிவிகிதம், வங்கிகளை விட அதிகமாகும். இந்நிலையில், தனியார் வங்கிகள் UPI மூலம் கடன் வழங்கும் சேவையை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஆக்ஸிஸ், கோடக் மஹிந்திரா, HDFC உள்ளிட்ட வங்கிகள் நவி, சூப்பர்மனி போன்ற நிதி தொழில்நுட்ப வல்லுநர்களுடன் இணைந்து, கடன் திட்டங்களை வழங்க ஆயத்தமாகி வருகின்றன.

Similar News

News January 14, 2026

இன்று ₹2,000, ₹5,000 ₹10,000

image

பொங்கல் பண்டிகை எதிரொலியால் தமிழகம் முழுவதும் பூக்களின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. முக்கிய மலர் சந்தைகளில் அதிகபட்சமாக மல்லிகைப்பூ ஒரு கிலோ ₹5,000, ₹10,000 முதல் ₹12,000 வரை விற்பனையாகிறது. அதேபோல கிலோ பிச்சிப் பூ ₹1,200, முல்லை ₹2,000 வரை விற்பனையாகிறது. கடும் பனிப்பொழிவு, மழையின் தாக்கம் காரணமாக ஏற்பட்ட வரத்து குறைவினால் மல்லிகைப்பூ விலை அதிகரித்துள்ளதாக பூ வியாபாரிகள் கூறுகின்றனர்.

News January 14, 2026

கரும்பு சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிக்கலாமா?

image

கரும்பு சாப்பிட்டு முடித்து 15 நிமிடத்திற்கு பிறகே தண்ணீர் அருந்த வேண்டும். கரும்பில் உள்ள கால்சியம் சத்து, எச்சிலுடன் கலந்து வேதிவினை ஆற்றுகிறது. அந்த நேரத்தில் தண்ணீர் குடிக்கும்போது, அதிகமான சூட்டை கிளப்பும் எதிர்வினை நடக்கும். இதனால் நாக்கு வெந்து விடும். இதனை தவிர்க்க கொஞ்சம் இடைவெளி விட்டு தண்ணீர் அருந்த வேண்டும். இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்கள்.

News January 14, 2026

பெண்ணுக்கு இரண்டு பிறப்புறுப்புகள்… துயரம்!

image

இரண்டு பிறப்புறுப்புகள், இரண்டு கருப்பைகளுடன் இருந்த உ.பி.,யை சேர்ந்த இளம்பெண்ணுக்கு ஆபரேஷன் மூலம் லக்னோ டாக்டர்கள் மறுவாழ்வு அளித்துள்ளனர். பிறந்தது முதலே அப்பெண்ணுக்கு சிறுநீர் கழிப்பதிலும், குடல் இயக்கத்திலும் பெரும் பிரச்னை இருந்துள்ளது. இந்நிலையில், 3 ஆபரேஷன்கள் செய்து அதை டாக்டர்கள் சரி செய்துள்ளனர். இதையடுத்து, வாழ்க்கையிலேயே முதல் முறையாக அப்பெண் மருத்துவ உதவியின்றி வாழத் தொடங்கியுள்ளார்.

error: Content is protected !!