News May 14, 2024
நாளை மகளிர் உரிமைத் தொகை ₹1000

மகளிர் உரிமைத் தொகை ₹1000 ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி தகுதியான குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். அந்த வகையில் நாளை (மே15ஆம் தேதி) இதுவரை மகளிர் உரிமைத் தொகை வாங்கும் பெண்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படவுள்ளது. தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால் மேல்முறையீடு செய்தவர்களுக்கு நாளை ₹1000 வராது. அவர்களுக்கு தேர்தல் முடிந்த பிறகு பணம் செலுத்தப்படும் என தெரிகிறது.
Similar News
News December 11, 2025
விரைவில் மோடி – இஸ்ரேல் PM சந்திப்பு

PM மோடியை, இஸ்ரேல் PM பெஞ்சமின் நெதன்யாகு தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது, பயங்கரவாதத்தை இருவரும் வன்மையாக கண்டித்து உரையாடினர். காசா அமைதி திட்டத்தை விரைவாக செயல்படுத்துவதற்கும், உலகில் அமைதியை நிலைநாட்டும் முயற்சிகளுக்கும் இந்தியா ஆதரவளிக்கும் என மோடி உறுதியளித்தார். இந்நிலையில், இருநாட்டு தலைவர்களும் விரைவில் சந்திப்பார்கள் என இஸ்ரேல் PM அலுவலகம் தெரிவித்துள்ளது.
News December 11, 2025
இந்தியாவில் ₹3.14 லட்சம் கோடி முதலீடு செய்யும் அமேசான்

இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என அமேசான் தெரிவித்துள்ளது. இதற்காக ₹3.14 லட்சம் கோடி முதலீடு செய்யவுள்ளதாக அமேசான் அறிவித்துள்ளது. லாஜிஸ்டிக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதால் ஒட்டுமொத்த ஏற்றுமதி 80 பில்லியனாக அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. சிறுதொழில் செய்யும் 1.5 கோடி பேருக்கு AI-ன் பலன்கள் கொண்டு சேர்க்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 10, 2025
ஜூனியர் ஹாக்கி: ஜெர்மனி சாம்பியன்

சென்னையில் நடந்த ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் ஜெர்மனி மகுடம் சூடியுள்ளது. இறுதிப்போட்டியில் ஜெர்மனி, ஸ்பெயின் அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த மோதலில், இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்ததால் ஆட்டம் சமன் ஆனது. இதையடுத்து கடைபிடிக்கப்பட்ட பெனால்டி ஷூட் அவுட்டில் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, ஜெர்மனி சாம்பியனானது. தொடரை சிறப்பாக நடத்திய TN விளையாட்டுத்துறையை பலரும் பாராட்டுகின்றனர்.


