News May 7, 2025
TNPSC தோ்வுக்கு இலவச பயிற்சி

தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் 3,935 பணியிடங்களுக்கான அறிவிப்பை கடந்த 25ஆம் தேதி வெளியிட்டது. இதற்கு வரும் மே.24ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இந்நிலையில் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இத்தேர்வுக்கு இலவச பயிற்சி நடைபெறவுள்ளது. பயிற்சியில் பங்கேற்க விரும்பும் நபர்கள் வரும் 6ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News November 11, 2025
கோவை மதுவிற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது

கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் வெளியிட்ட அறிக்கையில், கோவை மாவட்டத்தில் நேற்று சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட பெரியசாமி (20), காளீஸ்வரன் (21), மற்றும் அஜித்குமார் (27) என்பவர்களே கைது செய்த அவர்களிடமிருந்து, 60 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர் என்று தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
News November 10, 2025
கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (10.11.25) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 10, 2025
பொள்ளாச்சி அருகே விபத்து: 2 பேர் பலி

பொள்ளாச்சியைச் சேர்ந்த சதாசிவம், சூளேஸ்வரம்பட்டியைச் சேர்ந்த பரத் ஆகிய 2 பேர் ஒரே பைக்கில் வடக்கிப்பாளையத்தில் இருந்து புரவிபாளையம் நோக்கி சென்றுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த டிராக்டர் மீது பைக் மோதியது. இதில் சதாசிவம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பரத் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


