News June 17, 2024
திமுக ஆட்சியில் இப்படி தான் நடக்கும்: இபிஎஸ்

தமிழகத்தில் மணல் கடத்தல் அதிகரித்துள்ளதாக இபிஎஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். 2 நாள்களுக்கு முன் புதுக்கோட்டையில் மணல் கடத்தலை தடுக்க முயன்ற கோட்டாட்சியரை லாரி ஏற்றி கொல்ல முயற்சி நடந்துள்ளதாக கூறிய அவர், திமுக ஆட்சியில் மணல் கடத்தலை தடுப்பவர்கள் மீதான தாக்குதல் வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. ஆனால், தாக்குதல் சம்பவங்களை மக்கள் வெளிச்சத்திற்கு வராதபடி தடுப்பதில் அரசு கவனம் செலுத்துகிறது என விமர்சித்தார்.
Similar News
News January 15, 2026
தமிழகம் முழுவதும் நாளை டாஸ்மாக் கடைகள் இயங்காது

திருவள்ளுவர் தினமான நாளை அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை மீறி, டாஸ்மாக், பார்கள் திறந்தாலோ, கள்ளச்சந்தையில் விற்றாலோ சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதாவது, இன்று இரவு 10 மணி முதல் ஜன.17 பிற்பகல் 12 மணி வரை மது வாங்க முடியாது. இதன் காரணமாகவும், பொங்கல் பண்டிகை என்பதாலும், இன்று டாஸ்மாக் கடைகள் திறந்த உடனே கூட்டம் அலைமோதுகிறது.
News January 15, 2026
உயிருடன் இருப்பதை உறுதி செய்ய APP அறிமுகம்

சீனாவில் தனிமையில் தவிப்பவர்கள் Hikikomori என்ற வருத்தத்திற்குரிய Trend-ஐ பின்பற்றுகின்றனர். இவர்கள் ஒரு அறைக்குள் தங்களை மாதக்கணக்காக பூட்டிக்கொள்கின்றனர். பிறகு உணவு தீர்ந்து பசியில் வாடி இறக்கின்றனர். பேசவும் யாருமில்லாததால் இறந்தால் கூட தாமதமாகவே தெரியவருகிறது. எனவே, இதற்காக ஒரு APP-ஐ அறிமுகப்படுத்தும் நிலைக்கு சீனா வந்துள்ளது. நம்மூரில் இந்நிலை வராமலிருக்க நண்பர்களிடம் அடிக்கடி பேசுங்க.
News January 15, 2026
இந்தியா இதை நிரூபித்து காட்டியுள்ளது: PM மோடி

நமது நாடு, பன்முகத்தன்மையை ஜனநாயகத்தின் மிகப்பெரிய பலமாக மாற்றியுள்ளதாக PM மோடி கூறியுள்ளார். காமன்வெல்த் மாநாட்டில் பேசிய அவர், இந்தியா சுதந்திரம் பெற்றபோது, பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாட்டில் ஜனநாயகம் நிலைத்திருக்க முடியுமா என்ற சந்தேகம் சர்வதேச அளவில் எழுந்ததாக குறிப்பிட்டார். ஆனால், அந்த அச்சங்களை இந்தியா இன்று தவறு என்று நிரூபித்து காட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


