News April 8, 2024
திட்டமிட்டு பொய் செய்தியை பரப்புகிறார்கள்

சில அரசியல் கட்சிகளின் தூண்டுதல் காரணமாக தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக இபிஎஸ் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் பலமுறை துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. குறிப்பாக, முந்தைய திமுக ஆட்சியில் சேலத்தில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக கூறிய அவர், தேர்தல் நேரத்தில் துாத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றி திட்டமிட்டு திமுக பொய் செய்திகளை பரப்பி வருவதாகவும் விமர்சித்தார்.
Similar News
News December 11, 2025
பாரதி கவிதைகள் துணிவை தூண்டின: PM

பாரதியின் 144-வது பிறந்தநாளையொட்டி, PM மோடி தனது எக்ஸ் பக்கத்தில் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். பாரதியின் கவிதைகள் துணிவை தூண்டியதாக குறிப்பிட்ட அவர், அவரது சிந்தனைகள் மக்களின் மனதில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றலை கொண்டிருந்ததாக தெரிவித்தார். இந்தியாவின் கலாச்சார, தேசிய உணர்வை பாரதி ஒளிர செய்ததாகவும், அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சமூகத்தை உருவாக்க பாடுபட்டதாகவும் PM குறிப்பிட்டார்.
News December 11, 2025
சற்றுமுன்: விலை மொத்தம் ₹10,000 உயர்ந்தது

வெள்ளி விலை இதுவரை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இன்று ஒரே நாளில் வெள்ளி விலை கிராமுக்கு ₹2 உயர்ந்து ₹209-க்கும், கிலோ வெள்ளி ₹2,000 உயர்ந்து ₹2,09,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ₹8,000, இன்று ₹2,000 என 2 நாளில் மொத்தம் ₹10,000 உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் வெள்ளி விலை உயர்ந்து காணப்படுவதால், வரும் நாள்களில் நம்மூரிலும் விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
News December 11, 2025
EPS-க்கு பதிலடி கொடுத்த செந்தில் பாலாஜி

தேர்தலுக்காக திமுக <<18435045>>லேப்டாப்<<>> வழங்குவதாக EPS விமர்சித்திருந்தார். இதற்கு பதிலளித்த செந்தில் பாலாஜி, 2024-ல் தான் லேப்டாப் திட்டம் பற்றி பட்ஜெட்டில் அறிவித்ததாக குறிப்பிட்டார். நிதி ஒதுக்கி, டெண்டர் விட்டு, பிறகு தான் தயாரிக்க முடியும் என்று கூறிய அவர், ஒரே நேரத்தில் 20 லட்சம் லேப்டாப் தயாரிக்க முடியுமா? என கேள்வி எழுப்பினார். சீக்கிரம் தயாரித்தால், அவசரகதி எனக்கூறியிருப்பர் எனவும் குறிப்பிட்டார்.


