News November 21, 2024
இவரை ஏலத்தில் எடுக்க கடும் போட்டி நிலவும்

IPL ஏலத்தில் ரிஷப் பண்டை எடுக்க அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார். ‘இந்த ஆண்டு அதிகபட்சமாக பண்ட் ₹25-₹28 கோடி வரை ஏலத்தில் எடுக்கப்படுவார் என நினைக்கிறன். அவரை ஏலத்தில் எடுக்க பஞ்சாப், RCB அணிகளுக்கிடையே கடும் போட்டி ஏற்படலாம்’ என்றார். டெல்லி அணியின் கேப்டனாக இருந்த பண்டை அந்த அணி தக்கவைக்காமல் கழற்றிவிட்டது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 7, 2025
இது என்னடா சீன அதிபருக்கு வந்த புது சோதனை!

தென் கொரியாவில் டிரம்பை சந்தித்தபோது சீன அதிபர் ஜி ஜின்பிங் சிரித்து பேசும் புகைப்படம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. இந்த போட்டோ சீனாவில் வெளியாகாதாம். ஏனென்றால், போட்டோஸ் மற்றும் தகவல்களை பகிர்வதில் கடுமையான கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு விதித்திருப்பதால் அங்கு இது வெளியாகாது. ஆனால், சீன அதிபரின் இந்த மறுபக்கத்தை உலகம் தெரிந்துகொள்ள வேண்டும் என வெள்ளை மாளிகை இப்புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.
News November 7, 2025
மாதவிடாயின் போது குமட்டல் வருதா? இதோ தீர்வு

மாதவிடாய்க்கு முன் குமட்டல் உணர்வு ஏற்படுகிறதா? ஒரு பொருளை வைத்தே இதனை ஈஸியாக சரி செய்யலாம். காலையில் இஞ்சி டீ குடிப்பது இதற்கு சரியான தீர்வாக அமையும் என சித்தா டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். போதுமான அளவு தண்ணீர் குடிப்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். வெளியே நடைபயிற்சி சென்று நல்ல காற்றை சுவாசிப்பதும் கூட குமட்டலை சமாளிக்க உதவியாக இருக்கும் என்கின்றனர். அனைத்து பெண்களுக்கும் SHARE THIS.
News November 7, 2025
BREAKING: கட்சியில் இணைகிறார்.. புதிய திருப்பம்!

அமமுக ஆட்சி மன்ற குழு தலைவரும், அரூர்(தனி) Ex MLA-வுமான முருகன் பாமகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. தருமபுரியில், கடந்த 2 நாள்களாக அன்புமணியின் நிகழ்ச்சிகளில் அவர் அடுத்தடுத்து பங்கேற்று வருகிறார். அரூரில் மிகவும் பிரபலமான முகம் என்பதால் அன்புமணி தரப்பில் வரும் தேர்தலில் முருகன் சீட்டுக்கு காய் நகர்த்தலாம் எனக் கூறப்படுகிறது. அமமுகவில் இருந்து பலரும் அதிமுக, திமுகவுக்கு தாவி வருகின்றனர்.


