News November 18, 2024
இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் TASMACல் டிஜிட்டல் முறையில் மதுவிற்பனை செய்யும் முறை அமலாகியுள்ளது. இதனால், மதுபாட்டிலுக்கு கூடுதலாக ₹10 வசூலிக்கப்படுவது தடுக்கப்படும் எனக் கூறப்பட்டது. ஆனால், பல இடங்களில் ரசீது வழங்கப்பட்டாலும் கூடுதலாகக் கடைக்காரர்கள் ₹10 கட்டாயமாக வசூலிக்கின்றனர். இதனால், மதுப்பிரியர்கள், ‘இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு’ என புலம்பியபடியே மதுவை வாங்கிச் செல்கின்றனர்.
Similar News
News December 15, 2025
BREAKING: வங்கிக் கணக்கில் ₹1,000 வந்தது

மகளிர் உரிமைத்தொகை ₹1,000 சற்றுமுன் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. கடந்த 12-ம் தேதி ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ நிகழ்ச்சியில் 2-ம் கட்ட திட்ட விரிவாக்கத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 17 லட்சம் மகளிருக்கு ₹1,000 செலுத்தப்பட்டது. இந்நிலையில், ஏற்கெனவே பயன்பெற்று வரும் 1.13 கோடி பயனாளிகளின் வங்கிக் கணக்கில் 28-வது தவணை தற்போது வரவு வைக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு வந்துவிட்டதா?
News December 15, 2025
இன்சூரன்ஸால் இந்தியாவில் விளையாடாத மெஸ்ஸி!

இந்தியா வந்துள்ள மெஸ்ஸி, எந்த கால்பந்து போட்டியிலும் விளையாடாததற்கு ஒரு இன்சூரன்ஸ் பாலிசிதான் காரணம். மெஸ்ஸி தனது இடது காலை சுமார் ₹8,000 கோடிக்கு இன்சூர் செய்துள்ளார். அர்ஜெண்டினா அல்லது இன்டர் மியாமி அணிகளுக்காக விளையாடும் போது காயமடைந்தால் மட்டுமே அந்த பாலிசி கவராகும். ஆனால், Exhibitional போட்டிகளில் காயம் அடைந்தால், பாலிசி கவராகாது என்பதால், மெஸ்ஸி இந்தியாவில் விளையாடவில்லை என கூறப்படுகிறது.
News December 15, 2025
இந்தியாவுக்கு பஹல்காம்.. ஆஸி.,க்கு போண்டி

சந்தோஷத்தை தந்த சுற்றுலா தலங்களான இந்தியாவின் <<16186680>>பஹல்காமும்<<>>, ஆஸி.,-யின் சிட்னி <<18568504>>போண்டி கடற்கரையும்<<>> பயங்கரவாதத்தின் கொடூரத்தால் துயரத்தின் தடங்களாக மாறியுள்ளன. இரு இடங்களிலும் மதம் மற்றும் இனத்தை அடிப்படையாக கொண்டே தீவிரவாத தாக்குதல்கள் நடந்துள்ளன. பஹல்காமில் 26 உயிர்களும், சிட்னியில் 15 உயிர்களும் பறிபோன நிலையில், இரண்டிலும் பயங்கரவாத அச்சுறுத்தலில் பாதிக்கப்பட்டவர்கள் அமைதியான பொதுமக்களே. So sad!


