News October 16, 2025

ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை

image

இன்று (அக்.16) வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே பங்குச்சந்தை ஏற்றத்துடன் காணப்படுகிறது. சென்செக்ஸ் 367 புள்ளிகள் உயர்ந்து 82,972 புள்ளிகளிலும், நிஃப்டி 109.10 புள்ளிகள் அதிகரித்து 25,433 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகிறது. ITI, Whirlpool, Titan ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் உள்ள நிலையில், HDFC Life Insurace உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவில் உள்ளன.

Similar News

News November 15, 2025

₹64.3 கோடியுடன் டாப்பில் உள்ள கொல்கத்தா

image

IPL அணிகள் தங்கள் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை இன்று மாலை வெளியிட்டது. இதில் KKR அணி 10 வீரர்கள் விடுவித்ததன் மூலம், அதிகபட்சமாக ₹64.3 கோடியை தன்வசம் வைத்துள்ளது. இதற்கு அடுத்த இடங்களில் CSK (₹43.4 கோடி), SRH (₹25.5 கோடி) LSG (₹22.9 கோடி), DC(₹21.8 கோடி), RCB (₹16.4 கோடி), RR (₹16.05 கோடி) , GT(12.9 கோடி), PBKS(₹11.5 கோடி), MI (₹2.75 கோடி) அகிய அணிகள் உள்ளன.

News November 15, 2025

பள்ளிகளுக்கு 12 நாள்கள் விடுமுறை… சூப்பர் அப்டேட்

image

நவம்பரில் அரசு விடுமுறையே இல்லாத நிலையில், அடுத்த மாதம் மொத்தமாக அரையாண்டு விடுமுறை வருவது மாணவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. டிச.15 முதல் 23-ம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதனையடுத்து, டிச.24 முதல் ஜன.4 வரை 12 நாள்கள் பள்ளிகளுக்கு விடுமுறையாகும். தேர்வுக்கான அட்டவணையை விரைவில் பள்ளிக்கல்வித் துறை வெளியிட உள்ளது.

News November 15, 2025

ஆஸ்கர் போட்டியில் பா.ரஞ்சித்தின் ஆவணப்படம்

image

பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ், யாழி பிலிம்ப்ஸ் தயாரிப்பில் மறைந்த முற்போக்கு பாடகரும், எழுத்தாளருமான தலித் சுப்பையாவின் வாழ்க்கையை மையமாக கொண்டு, ‘தலித் சுப்பையா-வாய்ஸ் ஆஃப் தி ரிபல்ஸ்’ என்ற ஆவணப்படம் உருவாக்கப்பட்டது. இயக்குநர் கிரிதரன் இதை இயக்கியிருந்தார். இந்நிலையில், இந்த ஆவணப்படம் ஆஸ்கருக்கான போட்டியில் பங்கேற்க தேர்வாகியுள்ளதாக நீலம் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

error: Content is protected !!