News November 18, 2024
அடுத்த மாதம் இந்தியா வரும் இலங்கை அதிபர்!

இலங்கையின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள அநுர குமார திசநாயக அடுத்த மாதம் அரசுமுறை பயணமாக இந்தியா வரவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் நடந்து முடிந்த தேர்தலில் தேசிய மக்கள் சக்தி அமோக வெற்றி பெற்றது. அண்டை நாடான இலங்கையில் நிகழ்ந்துள்ள அரசியல் மாற்றம், இந்தியாவின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படும் நிலையில் அதிபரின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
Similar News
News December 5, 2025
பாக்.,ல் இந்து கோயில்களின் நிலைமை இதுதான்

பாகிஸ்தானில் உள்ள 1,871 கோயில்களில் 37 மட்டுமே இயங்குவதாக அந்நாட்டு பார்லி., குழு முன் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் சொத்து மீட்புக் குழு (ETPB) கோயில்களை முறையாக பராமரிக்க தவறிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், இக்குழுவின் தலைமைப் பதவியை முஸ்லிம் அல்லாத நபர் ஒருவருக்கு வழங்கவேண்டும் என அங்குள்ள சிறுபான்மையினர் கோரிக்கை வைக்கின்றனர்.
News December 5, 2025
சற்றுமுன்: விஜய்யை சந்தித்தார் அடுத்த முக்கிய தலைவர்

சென்னை பனையூரில் உள்ள இல்லத்தில், விஜய்யை காங்., மூத்த நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி சந்தித்துள்ளார். ராகுல் காந்திக்கு நெருக்கமானவரான <<18458010>>பிரவீன்<<>>, சமீபத்தில் தவெகவை புகழ்ந்து பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்நிலையில்தான் இந்த சந்திப்பு நடந்துள்ளது. இதில், கூட்டணி தொடர்பாக பேசியிருக்கலாம் என கூறப்படுகிறது. தவெக – காங்., கூட்டணி அமையுமா?
News December 5, 2025
புடினை இந்த காரில் PM கூட்டி சென்றது ஏன்? DECODES

Range Rover, Mercedes போன்ற காஸ்ட்லியான கார்கள் இருக்கையில் புடினை, PM மோடி Fortuner-ல் அழைத்து சென்றுள்ளார். Range Rover UK உடையது, benz ஜெர்மனி உடையது. உக்ரைன் போரை கண்டித்து இவ்விரு நாடுகளும் ரஷ்யா மீது அதிக வரிகளை விதித்துள்ளன. எனவேதான் PM அந்த கார்களை தேர்ந்தெடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிகழ்வு இந்தியா-ரஷ்யா இடையிலான நட்புறவையும், வெளியுறவு கொள்கையையும் வெளிகாட்டுவதாக பேசப்படுகிறது.


