News May 4, 2024

தமிழகத்தை மிரட்ட வரும் ‘கள்ளக்கடல்’ நிகழ்வு

image

இந்தியப் பெருங்கடலின் தெற்குப் பகுதியில் எந்தவிதமான அறிகுறியும் இல்லாமல், திடீரென கடல் சீற்றம் அடையும் நிகழ்வு தான் ‘கள்ளக்கடல்’ என அழைக்கப்படுகிறது. தென் தமிழக கடற்கரையில் அத்தகைய கொந்தளிப்பு இன்றும், நாளையும் ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்திய கடல்சார் தகவல் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த கள்ளக்கடல் நிகழ்வுகள் இந்தியக் கடலோரப் பகுதிகளில் வளர்ந்து வரும் காலநிலை மாற்ற அபாயமாகக் கருதப்படுகின்றன.

Similar News

News November 14, 2025

BREAKING: தேஜஸ்வி யாதவ் வெற்றி

image

பிஹார் தேர்தலில், RJD தலைவர் தேஜஸ்வி யாதவ் ரகோபூர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். அத்தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து தேஜஸ்வி யாதவும், BJP-ன் சதீஷ் குமாரும் மாறி மாறி முன்னிலை வகித்தனர். இழுபறி நீடித்த நிலையில், தற்போது 11,000-க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தேஜஸ்வி யாதவ் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 14, 2025

ராஜஸ்தான், தெலங்கானா இடைத்தேர்தலில் காங். வெற்றி

image

ராஜஸ்தானின் Anta தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சியின் பிரமோத் ஜெயின் 69,571 வாக்குகள் பெற்று MLA-வாக தேர்வாகியுள்ளார். இதேபோல் தெலங்கானாவின் ஜூப்ளி ஹில்ஸ் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சியின் நவீன் யாதவ் 24,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியுள்ளார்.

News November 14, 2025

BREAKING: திங்கள்கிழமை முதல் அனைத்து பள்ளிகளுக்கும்…

image

அரசு பள்ளிகளில் பயிலும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை DCM உதயநிதி தொடங்கி வைத்துள்ளார். காரைக்குடியில் முதல்கட்டமாக 1,448 மாணவ, மாணவியருக்கு சைக்கிள்களை அவர் வழங்கினார். அனைத்து பள்ளிகளிலும் ₹248 கோடி மதிப்பில் 5,34,017 மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கப்பட உள்ளது. தற்போது, வார விடுமுறை என்பதால் வரும் திங்கள்கிழமை முதல் சைக்கிள் விநியோகம் செய்யும் பணி தொடங்கும்.

error: Content is protected !!