News July 5, 2025
அங்கன்வாடிகளை மூடி வரும் அரசு.. பின்னணி என்ன?

தமிழகம் முழுவதும் அங்கன்வாடி மையங்களில் போதிய ஊழியர்கள் இல்லாததால், குழந்தைகளை அனுப்ப பெற்றோர் தயங்குகின்றனர். இதனால், இந்த ஆண்டு 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டுள்ளன. சென்னை 147, கோவை, 57, ஈரோடு 49, விழுப்புரம் 42, குமரி 21, சேலம் 21, வேலூர் 13 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டுள்ளன. அதேநேரம், திருச்சி, திண்டுக்கல், நீலகிரி, தென்காசி மாவட்டங்களில் ஒரு அங்கன்வாடி மையம் கூட மூடப்படவில்லை.
Similar News
News November 17, 2025
ரஜினி படத்தை தனுஷ் இயக்குகிறாரா?

கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினியின் 173-வது படத்தில் இருந்து சுந்தர் சி தவிர்க்க முடியாத காரணத்தால் வெளியேறிவிட்டார். இதனையடுத்து அந்த படத்தை யார் இயக்கு போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் ரஜினி படத்தை தனுஷ் இயக்கப்போவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அப்படி தனுஷ் இயக்குவது உறுதியானால் எந்த மாதிரி கதையை அவர் எடுப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த காம்போ எப்படி இருக்கும்?
News November 17, 2025
இன்றைய நல்ல நேரம்

▶நவம்பர் 17,கார்த்திகை 1 ▶கிழமை:திங்கள் ▶நல்ல நேரம்: 6.00 AM – 7.30 AM ▶ராகு காலம்: 7.30 AM – 9.00 AM ▶எமகண்டம்: 10.30 AM – 12.00 AM ▶குளிகை: 1.30 PM – 3.00 PM ▶திதி: திரையோதசி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶சந்திராஷ்டமம்: பூரட்டாதி ▶சிறப்பு: ஐயப்ப பக்தர்கள் மாலையணிதல், சிவன் கோயிலில் சங்கு அபிஷேகம், ஸ்ரீ அன்னை நினைவு நாள்.
News November 17, 2025
சத்தீஸ்கரில் 9 நக்சல்கள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரின் கோல்மால் பாட் வனப்பகுதியில் நக்சல்கள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அங்கு போலீசாரும், பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியபோது, நக்சல்கள் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டுள்ளனர். இருதரப்பும் மாறி மாறி துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 3 நக்சல்கள் கொல்லப்பட்டனர். கடந்த 3 நாட்களில் மட்டும் 9 நக்சல்கள் என்கவுண்டரில் கொல்லப்பட்டுள்ளனர்.


