News January 9, 2025
INDIA கூட்டணியின் எதிர்காலம்? உமர் கவலை

லோக்சபா தேர்தலுக்கு பிறகு INDIA கூட்டணியின் ஆலோசனை கூட்டம் இன்னும் நடைபெறாதது துரதிர்ஷ்டமானது என உமர் அப்துல்லா கவலை தெரிவித்துள்ளார். கூட்டணியின் நோக்கம் என்ன? யார் வழிநடத்துவது? என்பது குறித்து தலைவர்களிடையே தெளிவு இல்லை எனவும், இப்படி இருந்தால் எப்படி முன்னோக்கி செல்வோம்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், டெல்லி தேர்தலுக்கு பிறகு ஆலோசனை கூட்டம் நடத்தவும் அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News November 12, 2025
உசைன் போல்ட் பொன்மொழிகள்

*பந்தயத்தின் தொடக்கத்தைப் பற்றி சிந்திக்காதீர்கள், முடிவைப் பற்றிச் சிந்தியுங்கள். *உங்கள் கனவுகளை நம்புங்கள், எதுவும் சாத்தியமாகும். *நீங்கள் பந்தயத்தைப் பற்றி அதிகமாகச் சிந்தித்துக்கொண்டிருந்தால், அதைக் கொஞ்சம் கொஞ்சமாக இழக்க நேரிடும். *மற்றவர்களின் விருப்பத்தைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. எனக்கு நான் முதலிடம் கொடுத்துள்ளேன்.
News November 12, 2025
பிஹாரில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் பாஜக

பிஹாரில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என NDTV-ன் கருத்துக் கணிப்புகள் கணித்துள்ளன. பாஜக 69, நிதிஷ்குமாரின் JD(U) 62, தேஜஸ்வி யாதவ்வின் RJD 63 இடங்களில் வெற்றி பெறும் என அதில் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம், அம்மாநிலத்தில் NDA கூட்டணியின் மூத்த அண்ணனாக பாஜக உருவாக உள்ளது. கடந்த தேர்தலில் 75 தொகுதிகளில் வென்று RJD தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது குறிப்பிடத்தக்கது.
News November 12, 2025
டெல்லியில் முழுமையான குண்டு வெடிக்கவில்லை

டெல்லி கார் குண்டு வெடிப்பு தற்கொலைப்படை தாக்குதல் அல்ல என உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஃபரிதாபாத்தில் 2,900 கிலோ வெடிபொருள் சிக்கியதால், தன்னிடம் உள்ள வெடிபொருளும் சிக்கிவிடுமோ என்ற அச்சத்தில், குண்டு ஆரம்ப நிலையில் இருந்த போதே, உமர் அதை வெடிக்க வைத்துள்ளார். முழுமை பெற்ற குண்டு வெடித்திருந்தால் நிச்சயம் பேரழிவு ஏற்பட்டிருக்கும் என உளவுத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


