News August 5, 2024
நெல்லை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை

தமிழக கடற் பகுதிகளில் கனமழை மற்றும் காற்றானது மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வரை வீசக்கூடும் என்பதால் நெல்லை மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அறிவித்துள்ளது. இந்நிலையில் உவரி, இடிந்தகரை, பெருமணல், கூத்தன்குழி உட்பட 10 மீனவ கிராமங்களில் உள்ள மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
Similar News
News January 25, 2026
நெல்லை: GH-ல் இவை எல்லாம் இலவசம்! தெரிஞ்சுக்கோங்க

நெல்லை அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ்
இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் நெல்லை மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 0462-2573129 தெரிவியுங்க. இந்த பயனுள்ள தகவலை Share பண்ணுங்க.
News January 25, 2026
அம்ரித் பாரத் ரயிலுக்கான கட்டணங்கள் அறிவிப்பு

வள்ளியூர் திருநெல்வேலி வழியாக திருவனந்தபுரத்தில் இருந்து தாம்பரம் வரை அம்ரித் பாரத் ரயில் வாராந்திர சேவையாக இயக்கப்படுகிறது. இதன் முதல் ரயில் 28ம் தேதி தாம்பரத்தில் இருந்து தொடங்குகிறது. இந்த ரயிலுக்கு நெல்லையிலிருந்து தாம்பரத்திற்கு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கட்டணம் 420 ரூபாய், பொதுப்பெட்டியில் பயணிக்க கட்டணம் 240 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 22 பெட்டிகள் இணைக்கப்படுகிறது.
News January 25, 2026
நெல்லை: பிளேடால் கழுத்தை அறுத்த வாலிபர் உயிரிழப்பு

சேரன்மாதேவி பகுதியை சேர்ந்தவர் இசை ராஜா (19). இவர் கடந்த 22ம் தேதி இரவு மதுபோதையில் திடீரென தனது கழுத்தை அறுத்துக் கொண்டார். இவரை மீட்டு சேரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை முடிந்து வீட்டிற்கு வந்த நிலையில், மீண்டும் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதானல் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து சேரை போலீசார் விசாரனை.


