News August 6, 2024

மக்களின் கண்ணீர் கடலில் உடல்கள் அடக்கம்

image

நிலச்சரிவில் சிக்கி அடையாளம் தெரியாமல் போன உடல்களுக்கு சீரியல் நம்பர்கள் வழங்கப்பட்டுள்ளன. உடற்கூராய்வின் போதே அனைத்து உடல்களின் டிஎன்ஏ மாதிரிகளும் சேகரிக்கப்பட்டு, சீரியல் நம்பரில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது அடையாளம் தெரியாத உடல்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தியப்பின் புதைக்கப்பட்டு வருகின்றன. மேலும், உடலை எடுத்த இடத்தைப் பொறுத்து, இறந்தவர்களின் சமாதிகளில் விரைவில் பெயர் குறிக்கப்படும்.

Similar News

News January 15, 2026

சற்றுமுன்: ‘விஜய் உடன் பொங்கல்’

image

டெல்லியில் PM மோடி பங்கேற்ற பொங்கல் விழாவில் ‘பராசக்தி’ படக்குழுவினர் பங்கேற்றதை காங்., விமர்சித்து வருகிறது. இந்நிலையில், விஜய் ஒரு நடிகராக இருந்திருந்தால் அவரையும் இந்த விழாவிற்கு அழைத்திருப்போம் எனத் தமிழிசை கூறியுள்ளார். மேலும், ‘ஜன நாயகன்’ ரிலீஸாகும் போதே தங்களுக்கு பொங்கல் என விஜய் ரசிகர்கள் கூறிவிட்டதால், அப்போது அவர்களுடன் சேர்ந்து நாமும் பொங்கல் கொண்டாடுவோம் என தெரிவித்துள்ளார்.

News January 15, 2026

இன்ஸ்டாகிராமில் துப்பாக்கி விற்ற திமுக நிர்வாகி!

image

நெல்லையில் இன்ஸ்டாகிராம் மூலம் துப்பாக்கி விற்பனை செய்ததாக திமுக பொறியாளர் அணி நிர்வாகி ரத்தினம் பாலா உள்ளிட்ட மூவர் கைதானதை அதிமுக விமர்சித்துள்ளது. திமுக ஆட்சியில் கூலிப்படை, போதைப்பொருள் தாண்டி துப்பாக்கி நெட்வொர்க்கும் வளர்ந்துள்ளதாகவும், இச்செய்தியால் மக்கள் நிம்மதியாக நடமாட அச்சப்படுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது. அதோடு கைதான ரத்தினம் பாலா DCM-உடன் இருக்கும் போட்டோவும் வைரலாகி வருகிறது.

News January 15, 2026

ராஜ மாதா காலமானார்

image

தர்பங்கா அரச குடும்பத்தின் கடைசி மகாராணி காமசுந்தரி தேவி(96) காலமானார். மகாராஜா காமேஷ்வர் சிங் மறைவிற்கு பிறகு, ராஜமாதாவாக உருவெடுத்த இவர் தர்பங்காவில் பனாரஸ் இந்து, பாட்னா, அலகாபாத் பல்கலைக்கழகங்கள் அமைவதற்கு நிதியுதவி அளித்தார். 1962-ல் சீனாவுடனான போரின்போது இந்திய ராணுவத்திற்கு 600 கிலோ தங்கத்தை நன்கொடையாக அளித்தார். காமசுந்தரி மறைவால் தர்பங்கா அரச குடும்பத்தின் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது.

error: Content is protected !!