News August 22, 2025
தவெக மாநாட்டில் சோகம்.. தொண்டர்கள் மரணம்

மதுரை தவெக மாநாட்டிற்கு சென்ற அக்கட்சியை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர். சென்னையை சேர்ந்த பிரபாகரன்(33) மாநாட்டுக்கு செல்லும் வழியில் சக்கிமங்கலத்தில் உயிரிழந்தார். அதேபோல், மாநாடு முடிந்து நீலகிரி திரும்பி கொண்டிருந்த ரித்திக் ரோஷன்(18) திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அதே காரில் பயணம் செய்த ரவி(18) வாந்தி, மயக்கம் ஏற்பட்டு ஆபத்தான நிலையில், மதுரை GH-ல் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Similar News
News January 20, 2026
லஞ்சம் பெற்றதற்கு CM உடந்தையா? அண்ணாமலை

அமைச்சர் KN.நேருவுக்கு எதிராக ED மூன்றாவது அறிக்கை சமர்ப்பித்து அவர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு CM கொடுப்பதற்கு 2 விளக்கங்கள் மட்டுமே உள்ளதாக கூறிய அவர், ஒன்று ஊழல்களை வேண்டுமென்றே கண்டுகொள்ளவில்லை என சொல்லவேண்டும் (அ) இதற்கு தானும் முழு உடந்தை என ஒப்புக்கொள்ளவேண்டும் என்றார். மேலும், திமுக ஆட்சியின் நிர்வாகம் சீரழிந்துள்ளது எனவும் விமர்சித்துள்ளார்.
News January 20, 2026
BREAKING: கூட்டணி முடிவு.. விஜய்க்கு அதிர்ச்சி

பாஜகவின் புதிய தேசிய தலைவராக பொறுப்பேற்றுள்ள <<18905172>>நிதின் நபினுக்கு<<>>, TTV தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது NDA கூட்டணியில் அமமுக இணைவதை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். முன்னதாக, தவெகவுடன் அமமுக கூட்டணி வைக்கும் என கூறப்பட்ட நிலையில், கடந்த சில நாள்களாக NDA பக்கமே TTV பார்வை மாறியிருப்பதால், விஜய் தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளதாம்.
News January 20, 2026
ஆயுள் காப்பீடு எவ்வளவு தொகைக்கு எடுக்க வேண்டும்

ஆயுள் காப்பீடு எடுக்கும் போது, பலரும் எவ்வளவு தொகைக்கு அதனை எடுக்க வேண்டும் என்ற குழப்பம் உள்ளது. அதனை தீர்க்க ஈஸி கணக்கு ஒன்று உள்ளது. உங்களின் ஆண்டு வருமானத்தை விட ஆயுள் காப்பீடு 10 மடங்கு இருக்க வேண்டும். அதாவது, ஆண்டு வருமானம் ₹10 லட்சமாக இருந்தால், ₹1 கோடிக்கு காப்பீடு எடுக்க வேண்டும். ஒருவரின் இறப்பிற்கு பின், குடும்பம் பொருளாதாரச் நெருக்கடியில் சிக்காமல் தடுக்க ஆயுள் காப்பீடு உதவும்.


