News October 10, 2024

இரங்கல் தெரிவித்த டாடா சன்ஸ் தலைவர்

image

ரத்தன் டாடா மறைவுக்கு, டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் x தளத்தில் இரங்கல் தெரிவித்தார். அதில், ரத்தன் டாடா தனக்கு ஒரு நல்ல நண்பராகவும், வழிகாட்டியாகவும் இருந்தாக தெரிவித்த அவர், பணி, நேர்மை மற்றும் புதுமை ஆகியவற்றில் தனது அர்ப்பணிப்புடன் சர்வதேச அளவில் முத்திரை பதித்தவர் என புகழாரம் சூட்டினார். அவரால் பல லட்சம் மக்கள் பயனடைந்துள்ளதாகவும், டாடா குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் என தெரிவித்தார்.

Similar News

News November 14, 2025

பிஹாரில் இன்று வாக்கு எண்ணிக்கை.. வெல்வது யார்?

image

பிஹார் சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. பெரும்பாலான கருத்து கணிப்புகளில் NDA கூட்டணியே ஆட்சியை பிடிக்கும் என கூறப்பட்டிருந்தாலும், தாங்கள் தான் ஆட்சியை பிடிப்போம் என எதிர்க்கட்சிகளும் கூறிவருகின்றன. அதனால் இன்று பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. இது தவிர, தெலங்கானா, ஒடிஷா, ராஜஸ்தான் உள்ளிட்ட 6 மாநிலங்களில் நடந்த 8 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகளும் இன்று வெளியாக உள்ளன.

News November 14, 2025

லியானர்டோ டாவின்சி பொன்மொழிகள்

image

*ஞானம் இல்லாத ஒரு புத்திசாலி மனிதன், வாசனை இல்லாத ஒரு அழகான பூவைப் போன்றவன். *நான் ஏழை இல்லை. அதிகமாக ஆசைப்படுபவர்களே ஏழைகள். *நேராக நடப்பவர் அரிதாகவே விழுகிறார். *ஒழுக்கமே நமது உண்மையான செல்வம். *யார் மீதும் நம்பிக்கை வைக்காதவன் ஒருபோதும் ஏமாறமாட்டான். *தீமையை தண்டிக்காமல் இருப்பது அதை அங்கீகரிப்பதற்குச் சமமாகும். *ஒரு நாளில் பணக்காரனாக விரும்புகிறவன் ஒரு வருடத்தில் தூக்கிலிடப்படுவான்.

News November 14, 2025

அமைச்சருக்கு எதிரான அவதூறு வழக்கு வாபஸ்

image

தெலங்கானா முன்னாள் CM மகன் KTR-ஐயும், நடிகை சமந்தாவையும் இணைத்து, அம்மாநிலத்தின் தற்போதைய அமைச்சர் கொண்டா சுரேகா 2024-ல் பேசியது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, தங்களது குடும்பத்தின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக கூறி, நடிகர் <<14263995>>நாகர்ஜூனா<<>> அவதூறு வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்நிலையில், சுரேகா பொதுவெளியில் மன்னிப்பு கோரியதை அடுத்து, நாகர்ஜுனா தற்போது வழக்கை வாபஸ் பெற்றுள்ளார்.

error: Content is protected !!