News August 19, 2024
தாம்பரம் – செங்கோட்டை அதிவிரைவு ரயில் நேரம் மாற்றம்

தாம்பரம் – செங்கோட்டை இடையே நெல்லை வழியாக இயக்கப்படும் அதிவிரைவு ரயில் இன்று (ஆக.19) இரவு 11.30 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தாம்பரம் பகுதியில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் இரவு 9 மணிக்கு புறப்பட இருந்த ரயில் 2.30 மணி நேரம் தாமதமாக புறப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இதனால் பயணிகள் இந்த அறிவிப்பை ஏற்று அதன்படி பயணம் செய்ய தெற்கு ரயில்வே அறிவுறுத்தி உள்ளது.
Similar News
News January 18, 2026
நெல்லை: 10th போதும்., மத்திய அரசு வேலை ரெடி!

நெல்லை மக்களே, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) காலியாக உள்ள 173 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 50 வயதுக்குட்பட்ட 10th, 12th, ITI, டிப்ளமோ, ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் ஜன 30க்குள் இங்கு <
News January 18, 2026
நெல்லை: இளைஞருக்கு அரிவாள் வெட்டு!

நெல்லை மீனாட்சிபுரத்தை சேர்ந்த ஹரி (18) தனது நண்பர் பாலாஜியை சந்திக்க சி.என் கிராமத்திற்கு சென்றுள்ளார். அப்போது பாலாஜி, டவுனை சேர்ந்த பாஞ்சாலராஜன் என்பவரின் மாமியாரிடம் தான் கொடுத்த கடனை கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த பாஞ்சாலராஜன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஹரியை சரமாரியாக வெட்டினார். இதில் ரத்தவெள்ளத்தில் ஹரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் போலீசார் பாஞ்சாலராஜனை கைது செய்தனர்.
News January 18, 2026
நெல்லை: கஞ்சாவை வைத்து கொண்டே போலீசுக்கு மிரட்டல்!

பாளை போலீசார் ராம் பாப்புலர் சந்திப்பு பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பைக்கில் வந்த எம்.கே.பி நகரை சேர்ந்த முத்துசாமி (36) என்பவரை சோதனை செய்ய முற்பட்டபோது காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்து அவதூறு பேசி அச்சுறுத்தியுள்ளார். அவரை சோதனை செய்ததில் விற்பனைக்கு மறைத்து வைத்திருந்த அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 240 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து முத்துசாமியை கைது செய்தனர்.


