News August 6, 2024

₹3 லட்சம் நிவாரணம் வழங்க ஸ்டாலின் உத்தரவு

image

தஞ்சை அருகே பாதாள சாக்கடை சீரமைப்பு பணியின்போது மண் சரிந்து பலியான ஜெயநாராயணமூர்த்தி குடும்பத்திற்கு ₹3 லட்சம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவத்தை அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்துள்ளதாக இரங்கல் தெரிவித்துள்ள அவர், ஜெயநாராயணமூர்த்தியின் பெற்றோர், உறவினருக்கு ஆறுதல் கூறியுள்ளார். மேலும், மண் சரிந்ததில் காயமடைந்த தேவேந்திரன் குடும்பத்திற்கு ₹1 வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News November 16, 2025

அடிப்படை புரிதலின்றி பேசும் EPS: TRP ராஜா

image

தமிழகத்திற்கு வர இருந்த வெளிநாட்டு நிறுவனங்கள் ஒவ்வொன்றாக வெளியேறுவதாக <<18295289>>EPS குற்றம்சாட்டியிருந்தார்<<>>. இந்நிலையில், எவ்வித அடிப்படை புரிதலுமின்றி ஊர் வம்பு பேசும் பெருசுகள் போல EPS குற்றம்சாட்டி வருவதாக அமைச்சர் TRP ராஜா விமர்சித்துள்ளார். முதலீட்டு ஊக்குவிப்பு என்பது கையால் பாம்பு டான்ஸ் போடுவதுபோல சாதாரண விளையாட்டு அல்ல எனவும் கூறியுள்ளார்.

News November 16, 2025

பொங்கல் விடுமுறை.. வந்தது HAPPY NEWS

image

பொங்கல் விடுமுறையையொட்டி தமிழகத்தில் 500+ சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. சொந்த ஊர் செல்லும் பயணிகளின் நலன் கருதி வழக்கமான ரயில்களில் பெட்டிகள் அதிகரிக்கப்படும் என்றும், மதுரை, திருச்சிக்கு முன்பதிவில்லா மெமு ரயில்கள் இயக்க பரிசீலித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. பெட்டிகள் அதிகரிப்பால் Waiting List பற்றி கவலைப்பட வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

News November 15, 2025

தவெக தொண்டர்களுக்கு N.ஆனந்த் அழைப்பு

image

SIR-க்கு எதிராக தவெக நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் தொண்டர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என N.ஆனந்த் அழைப்பு விடுத்துள்ளார். SIR பணிகளால் வாக்காளர்கள் பெரும் குழப்பத்திலும், வாக்குரிமை பறிபோகுமோ என்ற அச்சத்திலும் இருப்பதாகவும் X-ல் அவர் பதிவிட்டுள்ளார் . SIR-க்கு எதிராக நாளை காலை 11 மணி அளவில் தவெக மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!