News November 19, 2024

22 பேர் கொண்ட இலங்கையின் புதிய அமைச்சரவை!

image

இலங்கையின் புதிய அமைச்சரவை இன்று பொறுப்பேற்றுக்கொண்டது. அதிபர் அநுர குமார திசநாயக தலைமையிலான அமைச்சரவையில் அவர் உட்பட 22 பேர் இடம்பெற்றுள்ளனர். நிதி, பாதுகாப்பு, திட்டம் மற்றும் டிஜிட்டல் ஆகிய துறைகள் அதிபர் வசம் உள்ளன. பிரதமர் ஹரிணி அமரசூர்யாவுக்கு கல்வித்துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. கடல்தொழில் நீரியல் வழங்கல் துறை அமைச்சராக தமிழரான ராமலிங்கம் சந்திரசேகரன் பொறுப்பேற்றுக்கொண்டார்.

Similar News

News December 15, 2025

திருச்சி: நிலம் வாங்க ரூ.5 லட்சம்!

image

நிலம் இல்லாத பெண்களுக்காவே ‘நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் அல்லது அதிகபட்சமாக ரூ.5 லட்சம் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு<> www.tahdco.com<<>> இணையதளத்தில் பார்க்கலாம் அல்லது திருவாரூர் மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகவும்.

News December 15, 2025

40 தொகுதிகளில் காங்., போட்டியா?

image

டெல்லியில் காங்., மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கருடன் செல்வப்பெருந்தகை ஆலோசனை செய்து வருகிறார். இதன்பின், ராகுலை சந்தித்து திமுக கூட்டணியில் எத்தனை இடங்களை கேட்கலாம் என்பது குறித்து ஆலோசிக்கும் அவர், எந்தெந்த தொகுதிகளில் காங்., வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பதற்கான லிஸ்ட்டையும் வழங்கவிருக்கிறார். 40-க்கும் மேற்பட்ட தொகுதிகளை காங்., குறிவைத்துள்ளதாம்.

News December 15, 2025

BREAKING: வங்கிக் கணக்கில் ₹1,000 வந்தது

image

மகளிர் உரிமைத்தொகை ₹1,000 சற்றுமுன் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. கடந்த 12-ம் தேதி ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ நிகழ்ச்சியில் 2-ம் கட்ட திட்ட விரிவாக்கத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 17 லட்சம் மகளிருக்கு ₹1,000 செலுத்தப்பட்டது. இந்நிலையில், ஏற்கெனவே பயன்பெற்று வரும் 1.13 கோடி பயனாளிகளின் வங்கிக் கணக்கில் 28-வது தவணை தற்போது வரவு வைக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு வந்துவிட்டதா?

error: Content is protected !!