News April 9, 2024

கோடை விடுமுறையையொட்டி சிறப்பு ரயில் அறிவிப்பு

image

கோடை விடுமுறையையொட்டி, சென்னை – நெல்லை இடையே வாராந்தர சிறப்பு ரயில் சேவையை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் எழும்பூரில் இருந்து வியாழக்கிழமைகளில் மாலை 6.45க்கு புறப்பட்டு, விழுப்புரம், சிதம்பரம், சிவகங்கை, விருதுநகர் வழியாக காலை 8.30க்கு நெல்லை சென்றடையும். மறுமார்க்கத்தில் வெள்ளிக்கிழமைகளில் மதியம் 3 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.

Similar News

News December 14, 2025

மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்புமா இந்திய அணி?

image

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20-ல் இந்தியா அபார வெற்றி பெற்றாலும், 2-வது போட்டியில் படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில் 3-வது போட்டி தர்மசாலாவில் இன்று இரவு நடைபெற உள்ளது. இதில் வெற்றி பாதைக்கு திரும்ப இந்திய அணி தீவிரமாக முயற்சிக்கும். அதேசமயம் கடும் போராட்ட குணம் கொண்ட SA அணி மீண்டும் நெருக்கடி கொடுக்க வாய்ப்புள்ளது. அதனால் இன்றைய ஆட்டம் அனல் பறக்கும் என எதிர்பார்க்கலாம்.

News December 14, 2025

தங்கமே கொடுத்தாலும் வாக்கு கிடைக்காது: செல்லூர் ராஜூ

image

திமுக நான்கே முக்கால் வருடங்களில் மதுரை மக்களுக்கு என்ன செய்தது என Ex அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுக கொண்டு வந்த திட்டங்களை மட்டுமே திமுக தொடங்கி வைப்பதாகவும் அவர் சாடியுள்ளார். மேலும் CM, DCM, அமைச்சர்கள் என யார் என்ன பேசினாலும் அடுத்து ஆளப்போவது அதிமுகதான் என்றும், திமுக தங்கத்தை அள்ளி கொடுத்தாலும் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

News December 14, 2025

SIR படிவம் சமர்ப்பிக்க இன்று கடைசிநாள்

image

TN முழுவதும் SIR பணிகள் கடந்த நவ.4-ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 2-வது முறையாக நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவடைவதால், வாக்குச்சாவடிகளில் BLO-க்கள் சிறப்பு முகாம்களை நடத்த உள்ளனர். அதில், தங்களது படிவங்களை மறக்காமல் ஒப்படைத்துவிடுங்கள். இல்லை எனில் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் விடுபட வாய்ப்புள்ளது. வரைவு வாக்காளர்கள் பட்டியல் வரும் 19-ம் தேதி வெளியாகவுள்ளது.

error: Content is protected !!