News April 13, 2024
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன்?

சிவகார்த்திகேயனின் 25ஆவது படத்தை, இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமரன் படத்தைத் தொடர்ந்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். அதன்பின், ‘டான்’ பட இயக்குநர் சிபி உடன் இணையும் அவர், பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார். சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படம், அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.
Similar News
News November 8, 2025
வாக்காளர் கணக்கெடுப்பில் குழப்பமோ குழப்பம்

SIR பணிகள் ஆரம்ப நிலையிலேயே பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. SIR படிவம் விநியோகம் செய்வதில் குழப்பம் நீடிப்பதாகவும், பல இடங்களில் படிவம் விநியோகம் செய்யும் பணியே துவங்கவில்லை எனவும் வாக்காளர்கள் கூறுகின்றனர். மேலும், போதுமான பயிற்சி இல்லாததால், படிவம் தொடர்பாக எழுப்பப்படும் சந்தேகங்களுக்கு பதில் அளிக்க முடியாமல் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் திணறி வருவதாகவும் புகார் கூறுகின்றனர்.
News November 8, 2025
தமிழகம் முழுவதும் தியாகச் சுவர்: அமைச்சர் மா.சு

உடல் உறுப்பு கொடையாளர்களை போற்றும் வகையில் தமிழ்நாடு முழுவதும் தியாகச் சுவர் எழுப்பப்படும் என்று அமைச்சர் மா.சு., தெரிவித்துள்ளார். CM ஸ்டாலின் எந்த ஒன்றையும் சொல்வதற்கு முன்னால் தாமே செய்து காட்டும் மிகச் சிறந்த மானுடப் பண்பில் உயர்ந்தவர்; அந்த வகையில் ஸ்டாலின் 2009-ம் ஆண்டே உடல் உறுப்பு தானம் செய்துள்ளார். இதுபோன்று ஒவ்வொருவரும் உடல் உறுப்பு தானம் செய்ய முன்வர வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
News November 8, 2025
ஆம்னி பஸ்கள் எல்லையில் நிறுத்தம்.. பயணிகள் அவதி!

TN ஆம்னி பஸ்களுக்கு கேரளாவில் ₹70 லட்சம் அபராதம் விதித்ததால் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் நேற்று மாலை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், கோவை, நெல்லை, குமரி மாவட்ட எல்லைகளில் சுமார் 200 ஆம்னி பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. சபரிமலை சீசன் என்பதால் பொதுமக்கள், பக்தர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சில பயணிகள் கட்டணத்தை திருப்பி கேட்டு பஸ் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.


