News November 3, 2025
SIR பணிகளுக்கு தடைவிதிக்க கோரி திமுக மனு

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (SIR) பணிகளுக்கு தடைவிதிக்க கோரி, திமுக சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ECI-ன் இந்த முன்னெடுப்பு அவசர கோலத்திலானது, பாரபட்சம் காட்டக்கூடியது மற்றும் ஜனநாயகத்திற்கு விரோதமானது என மனுவில் குறிப்பிட்டுள்ளது. முன்னதாக, SIR-ன் மூலம் பாஜகவிற்கு எதிரான வாக்காளர்களை நீக்க முயற்சிப்பதாக திமுக குற்றஞ்சாட்டியிருந்தது.
Similar News
News November 16, 2025
₹5 லட்சம் வரை இலவச சிகிச்சை: அடடே அரசு திட்டம்!

உங்கள் வீட்டில் உள்ள முதியவர்களுக்கு மருத்துவ செலவு அதிகமாக ஆகிறதா? மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டம் மூலம் அவர்களுக்கு இலவசமாக சிகிச்சை பார்க்கலாம். இத்திட்டத்தின் மூலம் 70 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவச சிகிச்சைக்காக ஆண்டுக்கு ₹5 லட்சம் வரை கிடைக்கிறது. இதற்கு விண்ணப்பிக்க இங்கே <
News November 16, 2025
6 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாற்றம்

124 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பேட்டிங் செய்துவரும் இந்தியா, தெ.ஆ., அணியின் பந்துவீச்சில் தடுமாறி வருகிறது. இந்திய அணி தற்போது 6 விக்கெட்களை இழந்து விளையாடி வருகிறது. அக்சர், குல்தீப் களத்தில் உள்ளனர். ஆட்டத்தை ஃபினிஷிங் செய்வார் என எதிர்பார்த்த ஜடேஜாவும் 18 ரன்களில் பெவிலியன் திரும்பினார். நிதானமாக விளையாடிய வாஷிங்டன் சுந்தர் 31 ரன்கள் எடுத்த நிலையில் ஹார்மரிடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.
News November 16, 2025
பண்ணையாரை நாங்க மிரட்ட முடியுமா? ரகுபதி

பாஜகவினரை, திமுகவினர் மிரட்டுவதாக நயினார் நாகேந்திரன் பேட்டி ஒன்றில் குற்றஞ்சாட்டியிருந்தார். அதற்கு அமைச்சர் ரகுபதி, ‘நயினார் நாகேந்திரன் ஒரு பண்ணையார்! அவரை போய் நாங்க மிரட்ட முடியுமா?’ என்று கலகலப்பாக பதில் அளித்துள்ளார். நயினார் நாகேந்திரனும் சாந்தமானவர் தான் என்று கூறிய அமைச்சர், திமுக மிரட்டாது என்பது அவருக்கு நன்றாகவே தெரியும் எனவும் குறிப்பிட்டார்.


