News November 2, 2025

SIR-ஐ கண்டு திமுக ஏன் அஞ்சுகிறது? TTV தினகரன்

image

SIR-ல் என்ன தவறு நடந்து விடப்போகிறது என திமுக அஞ்சுகிறது என TTV தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். திமுக ஆட்சிதானே நடக்கிறது, எப்படி தில்லுமுல்லு செய்ய முடியும் எனவும், கொடநாடு விவகாரத்தில் EPS-ஐ திண்டுக்கல் சீனிவாசன் கோர்த்துவிடப் பார்க்கிறார் என்றும் அவர் கூறியுள்ளார். முன்னதாக, கொடநாடு விவகாரத்தில் <<18173992>>EPS அக்யூஸ்ட்<<>> என்றால் ஜெயிலில் போட வேண்டியதுதானே என்று திண்டுக்கல் சீனிவாசன் கூறியிருந்தார்.

Similar News

News December 9, 2025

தமிழ் ஆட்சி மொழி தின கொண்டாட்டம்: ஆட்சியர் தகவல்

image

தமிழ் ஆட்சி மொழியாக சட்டம் இயற்றப்பட்ட நாளை நினைவு கூறும் வகையில் திருவாரூர் மாவட்டத்தில் வரும் 17-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை ஒரு வார காலத்திற்கு கொண்டாடப்பட உள்ளது. சட்ட வாரம் தொடர்பான நிகழ்ச்சிகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தினந்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

News December 9, 2025

தெரு நாய்க்கடி.. பள்ளிகளுக்கு முக்கிய உத்தரவு

image

தெரு நாய்க்கடி தொடர்பாக பள்ளிகளுக்கு அரசு முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. நாய்க்கடியால் பாதிக்கப்பட்டால் தயக்கமின்றி ஆசிரியரிடமோ, பெற்றோரிடமோ தெரிவிக்குமாறு மாணவர்களுக்கு உரிய ஆலோசனை தர அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தெரு நாய்களுக்கு உணவு தருவது உள்ளிட்டவற்றை தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. நாய்க்கடியால் மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

News December 9, 2025

ஈரோடு பொதுக்கூட்டத்துக்கான தேதியை மாற்றிய தவெக

image

ஈரோட்டில் விஜய் பிரசாரம் செய்ய உள்ள இடத்தை செங்கோட்டையன் நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதுவரை இல்லாத அளவுக்கு 84 நிபந்தனைகளை போலீசார் விதித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் விஜய்யின் பொதுக்கூட்டம் டிச.16-ம் தேதியில் இருந்து, டிச.18-ம் தேதிக்கு மாற்றப்படுவதாகவும், 25,000 பேர் வரை அதில் பங்கேற்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!