News November 19, 2024
SHOCK: தெரு விளக்கு இல்லாததால் 137 பேர் பலி

போதிய தெரு விளக்கு இல்லாததால் கடந்த 6 ஆண்டுகளில் ஒரே பகுதியில் நிகழ்ந்த 542 விபத்துகளில் 137 பேர் பலியான அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஐகோர்ட் மதுரைக் கிளையில் சமயநல்லூர் டிஎஸ்பி தாக்கல் செய்த அறிக்கையில், மதுரை பாத்திமா கல்லூரி முதல் சமயநல்லூர் வரை உள்ள சாலையில் போதிய தெருவிளக்கு இல்லாததால் அதிக அளவிலான விபத்துகள் நிகழ்ந்து உள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.
Similar News
News December 8, 2025
விரைவில் ஆண்களுக்கும் விடியல் பயணம்?

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், மக்களை கவர அரசு பல திட்டங்களை பரிசீலித்து வருகிறது. அந்த வகையில், மகளிர் விடியல் பயணத்தை போல, ஆண்களுக்கும் இலவச பஸ் பயண திட்டத்தை அறிவிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான விடியல் பயண திட்டம் குறித்த அறிவிப்பு, அடுத்த ஓரிரு மாதங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News December 8, 2025
நாடாளுமன்றத்தில் இன்று சிறப்பு விவாதம்

தேசிய பாடலான வந்தேமாதரம் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, இன்று நாடாளுமன்றத்தில் சிறப்பு விவாதம் நடைபெற உள்ளது. லோக்சபாவில் மதியம் 12 மணிக்கு விவாதத்தை தொடங்கி வைத்து PM மோடி உரையாற்ற உள்ளார். ராஜ்யசபாவில் அமித்ஷா விவாதத்தை தொடங்கி வைக்க உள்ளார். சுதந்திரப் போராட்டத்திற்கு உத்வேகம் அளித்த ‘வந்தே மாதரம்’ பாடலின் வரலாறு, கலாச்சார முக்கியத்துவம் குறித்து MP-க்கள் பேச உள்ளனர்.
News December 8, 2025
100 மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்ப்பு

2026 ஆகஸ்ட் மாதத்திற்குள் 100 மொழிகளில் திருக்குறளை கொண்டு செல்லும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக, மத்திய செம்மொழி தமிழ் நிறுவனத்தின் தலைவர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். இதுவரை 25 இந்திய மொழிகளிலும், 9 உலக மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. வரவிருக்கும் நாள்களில் ஜெர்மன், பிரெஞ்சு, ஸ்பானிஷ் உள்ளிட்ட முக்கிய வெளிநாட்டு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


