News October 11, 2025
ஆட்சியில் பங்கு, அதிக சீட்டு: காங்., எம்.பி. உறுதி

தமிழகத்தில் ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பது அனைத்து காங்கிரஸ் கட்சியினரின் விருப்பமாகும் என்று கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் தெரிவித்துள்ளார். திமுக – காங்., இடையே தொடர்ந்து சில சலசலப்புகள் இருந்து வரும் நிலையில், வரும் தேர்தலில் அதிக சீட்டுகளை கேட்டு வாங்குவதில் காங்கிரஸ் கட்சி உறுதியாக உள்ளது என்று விஜய் வசந்த் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News December 14, 2025
BREAKING: வெளுத்து கட்டப்போகும் மழை… ALERT

தமிழகம், புதுச்சேரியில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. முக்கியமாக, டெல்டா, தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், மற்ற பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 19-ம் தேதி வரை தமிழகத்தில் மழை தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, வரும் நாள்களில் அதிகாலையில் பனியின் தாக்கம் அதிகரிக்கும் என்றும் IMD தெரிவித்துள்ளது.
News December 14, 2025
வாக்கு திருட்டு முழக்கத்துடன் டெல்லியில் காங்., பேரணி

பாஜக மற்றும் ECI மீது ராகுல் வைத்த வாக்கு திருட்டு குற்றச்சாட்டு பிஹார் தேர்தலில் அவருக்கு கைகொடுக்கவில்லை. எனினும் அதை தொடர்ந்து முன்னெடுத்து செல்லும் காங்கிரஸ், டெல்லியில் இன்று பேரணி நடத்த உள்ளது. மாலை 4 மணிக்கு ராம்லீலா மைதானத்தில் தொடங்கும் பேரணியில், சோனியா, மல்லிகார்ஜுனா கார்கே, ராகுல், பிரியங்கா உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
News December 14, 2025
மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்புமா இந்திய அணி?

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20-ல் இந்தியா அபார வெற்றி பெற்றாலும், 2-வது போட்டியில் படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில் 3-வது போட்டி தர்மசாலாவில் இன்று இரவு நடைபெற உள்ளது. இதில் வெற்றி பாதைக்கு திரும்ப இந்திய அணி தீவிரமாக முயற்சிக்கும். அதேசமயம் கடும் போராட்ட குணம் கொண்ட SA அணி மீண்டும் நெருக்கடி கொடுக்க வாய்ப்புள்ளது. அதனால் இன்றைய ஆட்டம் அனல் பறக்கும் என எதிர்பார்க்கலாம்.


