News October 11, 2025
9-ம் வகுப்புக்கு முன்பே பாலியல் கல்வி வேண்டும்: SC

தற்போது வரை 9-ம் வகுப்பு முதலே பாலியல் கல்வி பற்றிய பாடங்கள் புத்தகங்களில் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், போக்சோவில் கைதான 15 வயது சிறுவன் ஜாமின் கோரிய வழக்கின் விசாரணையின்போது, பருவம் அடைவதற்கு முன்பே பாலியல் கல்வியை கற்றுக் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று SC தெரிவித்துள்ளது. 9-ம் வகுப்புக்கு முன்பே பாலியல் கல்வியை வழங்கவும் SC வலியுறுத்தியுள்ளது. உங்கள் கருத்து என்ன?
Similar News
News December 8, 2025
கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் நுழைந்த பிரக்ஞானந்தா

FIDE Circuit-ல் 115 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்த பிரக்ஞானந்தா, கேண்டிடேட்ஸ் செஸ் தொடருக்கு தேர்வாகியுள்ளார். கேண்டிடேட்ஸ் தொடரில் வெற்றி பெறும் நபர் உலக செஸ் சாம்பியன் பட்டத்திற்கு போட்டியிடுவார். இந்த ஆண்டு டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ், லண்டன் செஸ் கிளாசிக் ஓபன் உள்ளிட்ட தொடர்களில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
News December 8, 2025
விஜய் அதிரடி முடிவு.. திமுக, அதிமுக அதிர்ச்சி

கொங்கு மண்டலத்தில் வாக்கு வங்கியை தக்க வைக்க அதிமுகவும், எப்படியாவது செல்வாக்கு பெற வேண்டும் என திமுகவும் போட்டிப்போட்டு களப்பணியாற்றி வருகின்றன. இவர்களுக்கு அதிர்ச்சியளிக்க, விஜய் திட்டம் தீட்டி வருகிறார். டிச.16 அன்று ஈரோட்டில் நடக்கும் தவெக பொதுக்கூட்டம் அதற்கு அச்சாரமிடும் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. செங்கோட்டையனின் மூலம் கொங்கு மண்டலத்தில் தவெகவை பலப்படுத்த அவர் திட்டமிட்டுள்ளாராம்.
News December 8, 2025
‘என் சாவுக்கு பிறகு இதை செய்யுங்கள்’.. பெரும் சோகம்

வாணியம்பாடியில் ரயில் முன் பாய்ந்து, ஓய்வுபெற்ற அரசு அதிகாரி சந்திரசேகரன்(76) தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருமணமாகாத அவர், கவனிக்க ஆளில்லாததால் சோக முடிவை எடுத்துள்ளார். அவரது வீட்டில் இருந்து தற்கொலை கடிதம் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில், இறுதி சடங்குக்கு ₹25,000 வைத்திருப்பதாகவும், வீட்டை சர்ச்சுக்கு எழுதி வைத்திருப்பதாகவும் சந்திரசேகரன் குறிப்பிட்டுள்ளார். கொடிது கொடிது முதுமையில் தனிமை கொடிது!


