News August 6, 2024

செந்தில்பாலாஜி ஜாமின் மனு: இன்று விசாரணை

image

ஜாமின் கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனுவை, உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கைதான அவரின் ஜாமின் மனு மீதான நேற்றைய விசாரணையில், அமலாக்கத்துறை தரப்பில் வாய்தா கேட்க, நீதிபதிகள் அதற்கு அதிருப்தி தெரிவித்தனர். தனக்கு ஜாமின் கிடைக்கக்கூடாது என்பதற்காகவே, விசாரணையை தள்ளிப்போட ED முயல்வதாக செந்தில்பாலாஜி தரப்பு குற்றஞ்சாட்ட, விசாரணை இன்று ஒத்திவைக்கப்பட்டது.

Similar News

News January 14, 2026

பொங்கலுக்கு கூடுதல் விடுமுறை.. அரசு அறிவித்தது

image

போகி பண்டிகையை முன்னிட்டு ஏற்கெனவே பள்ளிகளுக்கு இன்று (ஜன.14) கூடுதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசுக் கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் பொதுச் செயலாளர் சுரேஷ் அறிவித்துள்ளார். இதனால் கல்லூரிகளுக்கும் 5 நாள்கள் பொங்கல் விடுமுறையாகும். எனவே, வெளியூரில் தங்கிப் பயிலும் கல்லூரி மாணவர்கள் சொந்த ஊருக்கு செல்லத் தயாராகிவிட்டனர்.

News January 14, 2026

சூறாவளி சுற்றுப்பயணத்திற்கு ரெடியான திமுக

image

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு வரும் 19-ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பிப்.4, 5-ம் தேதிகளில் அண்ணா அறிவாலயத்தில் துறை சார்ந்த குழுக்களுடன் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து குடிமக்களின் குரலாக தேர்தல் அறிக்கை இருக்க வேண்டும் என்றும் குழுவிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News January 14, 2026

சபரிமலையில் இன்று மகரஜோதி!

image

சபரிமலை, மகரவிளக்கு சீசனின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக இன்று மகரஜோதி தரிசனம் நடக்கிறது. ஜோதி வடிவில் காட்சி தரும் ஐயப்பனை காண லட்சக்கணக்கான பக்தர்கள், தற்காலிக கூடாரங்கள் அமைத்து அங்கே தங்கியுள்ளனர். மகரஜோதியை காண சபரிமலையை சுற்றி 14 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மேலும், கோயிலுக்குள் 30,000 பேர் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!