News August 21, 2024

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் அறிவிப்பு

image

தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ‘’உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்” செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சேரன்மகாதேவி வட்டத்தில் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று (ஆக.21) காலை 9.00 மணி முதல் நாளை (ஆக.22) காலை 9 மணி வரை ஆய்வு செய்ய உள்ளார். இந்த ஆய்வின்போது பல்வேறு துறை அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News January 13, 2026

நெல்லையில் ரயில் முன் பாய்ந்த பெண் – தற்கொலை?

image

நெல்லை தச்சநல்லூரைச் சேர்ந்த முருகன் மனைவி மாடத்தி (40) என்பவர், இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த ஜன.07ந் தேதி கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறில் வீட்டை விட்டு வெளியேறினார். தண்டவாளத்தைக் கடக்கும்போது ரயில் மோதி உயிரிழந்தார். விபத்தில் சிக்கினாரா அல்லது தற்கொலை செய்துகொண்டாரா எனச் சந்திப்பு ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 13, 2026

நெல்லை: தூக்கி செல்லப்பட்ட மாநகராட்சி கவுன்சிலர்

image

திருநெல்வேலி மாநகராட்சியில் 55 வார்டு உறுப்பினர்கள் உள்ள நிலையில் தமிழ்நாடு அரசின் உத்தரவுபடி மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் ஒரு மாற்றுத்திறனாளி நியமன மாமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். மூன்று சக்கர வாகனத்தில் வரும் அவர் மேல் தளத்தில் உள்ள மாமன்ற கூட்டத்தை அரங்கிற்கு செல்வதற்கு சரியான வசதிகள் இல்லாத நிலையில் ரெண்டு பேர் உதவியுடனே மேலே செல்லும் அவலம் உள்ளது.

News January 13, 2026

நெல்லையப்பர் கோவிலில் தங்க விளக்கு தீபம் ஏற்றப்படுகிறது

image

நெல்லை சுவாமி நெல்லையப்பர் கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் பத்தர தீப திரு விழாவை முன்னிட்டு இன்று(ஜன.13) மாலை தங்க விளக்கு தீபம் ஏற்றப்படுகிறது. மாலை 06:00 மணிக்கு சுவாமி சன்னதி மணிமண்டபத்தில் இந்த வைபவம் நடைபெறும். இது அணையா விளக்காக 18ம் தேதி வரை காட்சிதரும். அன்றைய தினம் இரவு கோவிலின் அனைத்து பிரகாரங்களிலும் தீபங்கள் ஏற்றும் வைபவம் நடைபெறும்.

error: Content is protected !!