News August 20, 2024
சமஸ்கிருதம் சக்தி வாய்ந்த மொழி: ஆளுநர்

சமஸ்கிருதம் சக்தி வாய்ந்த மற்றும் அறிவியல் பூர்வமான மொழி என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சமஸ்கிருதத்தில் இருந்து தான் கலாச்சாரம் தோன்றியதாகவும், அந்த மொழியை தவிர்த்த தருணத்தில் நமது கலாச்சாரம் அழியத் தொடங்கிவிட்டதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார். மேலும், நவீன அறிவியல், தொழில்நுட்பத்திற்கேற்ப சமஸ்கிருதத்தை எடுத்து செல்ல வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News January 24, 2026
பாஜக Sound இந்துத்துவா, காங்., Soft இந்துத்துவா: சீமான்

TN-க்கு எதிரான கொள்கைகளில் பாஜக, காங்கிரஸ் இரு கட்சிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவையல்ல என சீமான் விமர்சித்துள்ளார். தாம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், காவிரி, முல்லைப் பெரியாறு, கச்சத்தீவு, இலங்கை தமிழர்கள் பிரச்னையில் இரு கட்சிகளும் தங்களது நிலைப்பாட்டை பகிரங்கமாக அறிவிக்க தயாரா எனக் கேள்வி எழுப்பினார். மேலும், பாஜக Sound இந்துத்துவா, காங்கிரஸ் கட்சி Soft இந்துத்துவா எனவும் சாடினார்.
News January 24, 2026
பாடகி ஜானகியின் உடல்நலம் குறித்த வதந்திக்கு விளக்கம்

மகன் <<18931928>>முரளி கிருஷ்ணா<<>> இறந்த துக்கத்தில் பாடகி எஸ்.ஜானகி மறைந்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இது பொய்யான தகவல் என்று தெளிவுப்படுத்தியுள்ள ஜானகியின் பேத்தி அப்சரா வைத்யுலா, குடும்பத்தினர், நண்பர்களின் அரவணைப்பில் எஸ்.ஜானகி நலமுடன் இருக்கிறார். எங்கள் குடும்ப வட்டத்திற்கு வெளியே உள்ள தனிநபர்களால் வதந்தி பரப்பப்படுகிறது. தவறான தகவல்களை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.
News January 24, 2026
பகுதிநேர ஆசிரியர்களின் போராட்டம் ஒத்திவைப்பு

பணி நிரந்தரம் செய்யக்கோரி கடந்த 17 நாள்களாக பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே <<18942504>>சிறப்பு மதிப்பெண்கள்<<>> மூலம் அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என CM ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்தார். இதனையடுத்து பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் கூட்டு இயக்கத்தினர் CM ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். பின்னர், போராட்டத்தை ஒத்தி வைப்பதாக அவர்கள் அறிவித்தனர்.


