News August 21, 2024
புதிய கட்சி தொடங்குகிறார் சம்பாய் சோரன்

ஜார்கண்ட் EX முதல்வர் சம்பாய் சோரன் ஒரு வாரத்தில் புதிய கட்சியைத் தொடங்குகிறார். அரசியலில் இருந்து ஓய்வு பெற மாட்டேன் என்றும், கட்சி தொடங்கி தனது புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தேர்தலில் தங்களுடன் கூட்டணி அமைத்து போட்டியிட விரும்பும் கட்சிகளை வரவேற்பதாகவும் அவர் கூறியுள்ளார். ஹேமந்த் சோரனுடன் ஏற்பட்ட முரண்பாட்டால், அவர் JMM கட்சியில் இருந்து சமீபத்தில் விலகினார்.
Similar News
News November 18, 2025
இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. முக்கியமாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் , தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் 23-ம் தேதி வரை மழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.
News November 18, 2025
இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. முக்கியமாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் , தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் 23-ம் தேதி வரை மழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.
News November 18, 2025
குற்றவாளிகள் நரகத்திலும் தப்ப முடியாது: அமித்ஷா

மோடியின் அரசு பயங்கரவாதத்தை வேர்களிலிருந்து ஒழிப்பதில் உறுதியாக உள்ளதாக அமித் ஷா தெரிவித்துள்ளார். டெல்லி குண்டுவெடிப்பு குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு, கடுமையான தண்டனையை சட்டத்தின் மூலம் எதிர்கொள்வார்கள் எனவும் திட்டவட்டமாக கூறியுள்ளார். மேலும் குற்றவாளிகள் நரகத்தில் இருந்தாலும் விடமாட்டோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஹரியானாவின் பரீதாபாத்தில் நடத்த நிகழ்ச்சியில் இவ்வாறு அமித்ஷா பேசியுள்ளார்.


