News October 13, 2025
சபரிமலை தங்கம் மாயம்: கூட்டு கொள்ளை அடித்தது அம்பலம்

சபரிமலையில் தங்கம் மாயமான விவகாரத்தில், தேவஸ்தான அதிகாரிகள் கூட்டு கொள்ளையில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது. தங்க தகடுகளை புதுப்பிக்க இடைத்தரகராக செயல்பட்ட உன்னி கிருஷ்ணன் போற்றி மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் 9 பேர் உள்ளிட்ட 10 பேர் மீது கேரள குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சபரிமலை துவார பாலகர் சிலைகளின் கவசங்களில் 986 கிராம் தங்கம் குறைந்த விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
Similar News
News December 11, 2025
செங்கல்பட்டு: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க
News December 11, 2025
பாரதி கவிதைகள் துணிவை தூண்டின: PM

பாரதியின் 144-வது பிறந்தநாளையொட்டி, PM மோடி தனது எக்ஸ் பக்கத்தில் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். பாரதியின் கவிதைகள் துணிவை தூண்டியதாக குறிப்பிட்ட அவர், அவரது சிந்தனைகள் மக்களின் மனதில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றலை கொண்டிருந்ததாக தெரிவித்தார். இந்தியாவின் கலாச்சார, தேசிய உணர்வை பாரதி ஒளிர செய்ததாகவும், அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சமூகத்தை உருவாக்க பாடுபட்டதாகவும் PM குறிப்பிட்டார்.
News December 11, 2025
சற்றுமுன்: விலை மொத்தம் ₹10,000 உயர்ந்தது

வெள்ளி விலை இதுவரை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இன்று ஒரே நாளில் வெள்ளி விலை கிராமுக்கு ₹2 உயர்ந்து ₹209-க்கும், கிலோ வெள்ளி ₹2,000 உயர்ந்து ₹2,09,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ₹8,000, இன்று ₹2,000 என 2 நாளில் மொத்தம் ₹10,000 உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் வெள்ளி விலை உயர்ந்து காணப்படுவதால், வரும் நாள்களில் நம்மூரிலும் விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


