News November 18, 2024
ரேஷன் அரிசி கடத்தலால் ரூ.69,000 கோடி இழப்பு!

நாடு முழுவதும் அரிசி, கோதுமை உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் கடத்தலால் ரூ.69,108 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. வீட்டு உபயோக செலவு கணக்கெடுப்பு(HCES) தரவுபடி ஆக. 2022 – ஜூலை 2023 வரை 20 மில்லியன் டன் ரேஷன் கடத்தப்பட்டுள்ளது. இது நாடு முழுவதும் மக்கள் பயன்படுத்தும் ரேஷன் பொருட்களில் 28% ஆகும். ரேஷன் அட்டையுடன் ஆதாரை இணைப்பதால் இதுபோன்ற கடத்தல் சம்பவங்களைத் தடுக்க முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News December 11, 2025
ரசிகர்களுடன் அஞ்சானை கொண்டாடிய சூர்யா

2014-ல் வெளியான அஞ்சான் படம் சோஷியல் மீடியாவில் கடுமையாக டிரோல் செய்யப்பட்டது. ஆனாலும் மனம் தளராத இயக்குநர் லிங்குசாமி, படத்தை ரீ-எடிட் செய்து ரீ-ரிலீஸ் செய்துள்ளார். ஆச்சரியம் என்னவென்றால், முன்பை விட இப்போது படத்திற்கு தியேட்டர்களில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனிடையே ரசிகர்களுடன் நடிகர் சூர்யா படத்தை பார்த்து மகிழ்ந்துள்ளார்.
News December 11, 2025
தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில், தவெக மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், 2026 தேர்தல் பணிகள், கட்சியின் அடுத்தக்கட்ட நகர்வுகள், விஜய்யின் சுற்றுப்பயணம் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், அருண்ராஜ் உள்ளிட்டோர் நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
News December 11, 2025
பாரதி கவிதைகள் துணிவை தூண்டின: PM

பாரதியின் 144-வது பிறந்தநாளையொட்டி, PM மோடி தனது எக்ஸ் பக்கத்தில் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். பாரதியின் கவிதைகள் துணிவை தூண்டியதாக குறிப்பிட்ட அவர், அவரது சிந்தனைகள் மக்களின் மனதில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றலை கொண்டிருந்ததாக தெரிவித்தார். இந்தியாவின் கலாச்சார, தேசிய உணர்வை பாரதி ஒளிர செய்ததாகவும், அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சமூகத்தை உருவாக்க பாடுபட்டதாகவும் PM குறிப்பிட்டார்.


