News April 11, 2024
தமிழகத்தில் ரூ.303 கோடி பறிமுதல்

தேர்தலை முன்னிட்டு பறக்கும் படையினர் மேற்கொண்ட சோதனையில் தமிழகத்தில் இதுவரை ரூ.303 கோடி பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதில் ரொக்கமாக ரூ.1,43,05,91,000, ரூ. 1,21,65,09,000 மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் ரூ.93,43,000 மதிப்பில் போதைப் பொருட்கள் உட்பட ரூ.303,63,00,000 மதிப்பிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
Similar News
News November 8, 2025
மருத்துவ துறையின் லெஜண்ட் காலமானார்

DNA-வின் இரட்டைச் சுருள் வடிவமைப்பை கண்டறிந்தவர்களில் ஒருவரும், நோபல் பரிசு பெற்றவருமான ஜேம்ஸ் வாட்சன் (97) காலமானார். நவீன உயிரியலில் பெரும் வளர்ச்சிக்கு வழிவகுத்த அந்தக் கண்டுபிடிப்பால், உடலில் மரபணு எப்படி வேலை செய்கிறது என்பதைக் கண்டறிய முடிந்தது. இதனால், மருத்துவம், தடயவியல் போன்ற துறைகளில் கூடுதல் தொழில்நுட்பத்தைக் கொண்டுவர முடிந்தது. அவரது மறைவுக்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
News November 8, 2025
தஞ்சை பல்கலை.,யில் ஆந்திர மாணவன் விபரீத முடிவு!

தஞ்சாவூரில் உள்ள சாஸ்த்ரா பல்கலை.,யில் ஆந்திராவை சேர்ந்த பி.டெக் மாணவன் அபினவ், 4-வது மாடியிலிருந்து குதித்ததால் உயிருக்கு ஆபத்தான நிலையில், ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருகிறார். முதல்கட்ட விசாரணையில், வகுப்பறையில் செல்போன் பயன்படுத்தியதை பேராசிரியர் கண்டித்ததால், அபினவ் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளது தெரியவந்துள்ளது.
News November 8, 2025
நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

SIR விவகாரம் தொடர்பாக CM ஸ்டாலின் தலைமையில் நாளை(நவ.9) திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. காலை 10 மணிக்கு காணொலி வாயிலாக நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் MP-க்கள், MLA-க்களும் பங்கேற்க வேண்டும் என துரைமுருகன் அறிவுறுத்தியுள்ளார். ஏற்கெனவே, SIR நடவடிக்கைகளுக்கு எதிராக திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகள் சார்பில் வரும் 11-ம் தேதி போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.


