News May 2, 2024
4 சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாட ரோஹித் விருப்பம்

டி20 உலகக் கோப்பையில் 4 சுழற்பந்து வீச்சாளர்களைக் கொண்ட அணியுடன் விளையாட விரும்புவதாக கேப்டன் ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார். அணித் தேர்வு குறித்து சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில், அதுகுறித்து தேர்வு குழுத் தலைவர் அகர்கருடன் சேர்ந்து விளக்கம் அளித்த ரோஹித், 4 சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாட விரும்புவதற்கான காரணத்தை தற்போது தெரிவிக்க இயலாது, அமெரிக்காவில் தெரியப்படுத்துவேன் என்றார்.
Similar News
News December 17, 2025
காந்தி கொலையில் RSS-க்கு தொடர்பு இல்லை: தமிழிசை

OPS – TTV இணைப்பை டெல்லி தலைமை பார்த்துக்கொள்ளும் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். 100 நாள் வேலை திட்டத்தில் சிலர் திட்டமிட்டு அரசியல் செய்வதாகவும் சாடினார். மேலும், மகாத்மா காந்தி கொலையில் RSS-க்கு தொடர்பு இல்லை என்பதை கோர்ட்டே கூறிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். MGNREGA திட்டம் VB-G RAM G என பெயர் மாற்றும் மசோதாவுக்கு திமுக, காங்கிரஸ், பாமக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
News December 17, 2025
அரையாண்டு தேர்வு விடுமுறை குறைப்பா? CLARITY

தமிழகத்தில் டிச.24 – ஜன.4 வரை அரையாண்டு தேர்வு விடுமுறை என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கனமழையையொட்டி, பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்ததால், அதனை ஈடு செய்யும் விதமாக விடுமுறை நாள்களை குறைத்து ஜன.2-ல் பள்ளிகள் திறக்கப்படும் என்ற தகவல் பரவியது. இந்நிலையில், இதனை மறுத்துள்ள பள்ளிக்கல்வித்துறை, ஜன.5 அன்று தான் பள்ளிகள் திறக்கப்படும் என உறுதிப்படுத்தியுள்ளது.
News December 17, 2025
பக்கா பிளான்.. திமுகவின் அடுத்த டார்கெட்

கொங்கு மண்டலத்தில் கட்சியை பலப்படுத்துவதில் திமுக தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், டிச.29-ல் திருப்பூர் பல்லடத்தில் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள் திமுக மேற்கு மண்டல மகளிர் மாநாடு’ நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கனிமொழி தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் CM ஸ்டாலின் சிறப்புரையாற்ற உள்ளார். கடந்த வாரம் வட தமிழகத்தை குறிவைத்து இளைஞர் அணி மாநாட்டை திமுக நடத்தியிருந்தது.


