News November 28, 2024

தமிழ்நாட்டிற்கு 30ஆம் தேதி ரெட் அலர்ட்

image

ஃபெங்கல் புயல் வலுவிழந்து வருகிற 30ஆம் தேதி காரைக்கால்- மகாபலிபுரம் இடையே கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை வைத்து, தமிழ்நாட்டிற்கு வருகிற 30ஆம் தேதி வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் 30ஆம் தேதி கனமழை முதல் அதி கனமழை பெய்யக்கூடும். டிச.1, டிச.2 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் பல இடங்களில் கனமழை பெய்யலாம் என வானிலை மையம் கூறியுள்ளது.

Similar News

News November 12, 2025

டெல்லி கார் வெடிப்பு: வெளியான பரபரப்பு தகவல்கள்

image

டெல்லி கார் வெடிப்பு வழக்கில் சிக்கிய தீவிரவாதிகளின் திட்டம் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. முதன்முதலில் குடியரசு தினம் மற்றும் தீபாவளி அன்று மிகப்பெரிய குண்டுவெடிப்புகளை நிகழ்த்த இவர்கள் திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இதற்காக கைதான உமர் நபி மற்றும் உமர் முகமது ஆகியோர் செங்கோட்டையில் பலமுறை உளவு பார்த்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக NIA கைதான 9 பேரிடம் விசாரணை நடத்திவருகிறது.

News November 12, 2025

டெல்லியில் காற்று மாசு அவசர நிலை

image

டெல்லியில் காற்று தரக்குறியீடு 428 ஆக உயர்ந்து, இந்த ஆண்டின் மிக மோசமான மாசு நிலையை எட்டியுள்ளது. இது கடந்த 11 மாதங்களில் இல்லாத அளவு அதிக மாசு ஆகும். இதனால், டெல்லி முழுவதும் GRAP-3 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. *கட்டுமான, இடிப்பு பணிகளுக்கு தடை *BS-III பெட்ரோல் மற்றும் BS-IV டீசல் 4 சக்கர வாகனங்களுக்கு கட்டுப்பாடு *5-ம் வகுப்பு வரை பள்ளிகளில் Hybrid முறையில் வகுப்புகள் நடத்த உத்தரவு.

News November 12, 2025

தோல்வியில் இருந்து தப்பிய பிரக்ஞானந்தா

image

உலகக் கோப்பை செஸ் தொடரில் இந்​தி​யா​வின் பிரக்ஞானந்​தாவும், பொது வீர​ராக பங்​கேற்​ற டேனியல் துபோவும் மோதினார்கள். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தின் 14-வது நகர்​வின் போது ராணி முன்​னால் இருந்த சிப்பாயை பிரக்​ஞானந்தா கவனக்​குறை​வாக நகர்த்​தி​னார். இதன்மூலம் டேனியல் எளிதாக வெற்றி பெற்றிருக்கலாம், ஆனால் அவசரத்தில் அதை கவனிக்க தவறிவிட்டார். பின்​னர் 41-வது நகர்த்​தலில் ஆட்​டம் டிரா​வில் முடிவடைந்​தது.

error: Content is protected !!