News April 17, 2024
பருப்பு விலை மூட்டைக்கு ₹700 உயர்ந்தது

பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் போன்ற பொருட்களுக்கு விருதுநகர் சந்தை பிரதானம். பருப்பு, எண்ணெய் வகைகளுக்கு இங்கு தான் விலை நிர்ணயிக்கப்படும். இந்த நிலையில், உளுந்து, பாசிப் பருப்பு போன்றவற்றின் விலை தற்போது கணிசமாக உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் கலக்கமடைந்துள்ளனர். முழு உளுந்து 100 கி. மூட்டைக்கு ₹700, சாதா உளுந்து ₹200, தொலி உளுந்து ₹100 மற்றும் பாசிப் பருப்பு ₹150 வரை விலை உயர்ந்துள்ளன.
Similar News
News December 8, 2025
சனாதன தர்மம் மூடநம்பிக்கை அல்ல அறிவியல்: PK

தமிழகத்தில் இந்துக்கள் மத சம்பிரதாயங்களை பின்பற்ற கூட சட்ட போராட்டம் நடத்த வேண்டியிருப்பதாக <<18482516>>பவன் கல்யாண்<<>> தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் இந்துக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும். சனாதன தர்மம் என்பது மூடநம்பிக்கை இல்லை, ஆன்மிக அறிவியல். அதேபோல், பகவத் கீதை என்பது பிராந்திய, மத நோக்கம் இல்லாதது. ஒவ்வொரு இளைஞரும் அதை படிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
News December 8, 2025
தோனியால் மட்டுமே இது சாத்தியம்: முரளி விஜய்

தோனி இந்தியாவில் பிறந்ததற்கு நாம் பெருமைப்பட வேண்டும் என EX இந்திய வீரர் முரளி விஜய் தெரிவித்துள்ளார். தோனி இயற்கையானவர், தனித்துவம் மிக்க தலைவர். 2007 T20 WC-ல் கடைசி ஓவரை ஜோகிந்தர் சர்மாவை வீச சொன்னது உள்ளிட்ட தனிச்சிறப்பு வாய்ந்த முடிவுகளை அவரால் மட்டுமே எடுக்க முடியும். அவரை போல வேறு எந்த வலதுகை பேட்ஸ்மேனாலும், மிகப்பெரிய சிக்ஸர் ஷாட்களை அடிக்க முடியாது என்றும் முரளி விஜய் தெரிவித்துள்ளார்.
News December 8, 2025
அமீர்கான் பட இயக்குநர் கைது

₹30 கோடி மோசடி வழக்கில் பிரபல பாலிவுட் இயக்குநர் விக்ரம் பட் மற்றும் அவரது மனைவி ஸ்வேதாம்பரியை ராஜஸ்தான் போலீசார் கைது செய்துள்ளனர். படம் எடுப்பதாக கூறி டாக்டர் அஜய் முர்தியா என்பவரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விக்ரம் பட்டின் மகள் உள்பட 8 பேர் மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. அமீர்கான் நடித்த ‘குலாம்’ படத்தை இயக்கியவர் விக்ரம் பட்.


