News September 30, 2025
நவராத்திரி 9-ம் நாள் பூஜை & விரத முறைகள்!

நவராத்திரி 9-ம் நாளில் அம்பிகையை பரமேஸ்வரி திருக்கோலத்தில் வழிபட வேண்டும். இன்று கையில் வில், அம்புகள், அங்குசம், சூலத்துடன் காட்சி தரும் அம்பிகையை தாமரை மலர்களால் அலங்கரிக்கலாம். பால், பாயாசம், நைவேத்தியம் செய்து வழிபடலாம். இந்த அம்பிகைக்கு வாசனைப் பொடிகளால் கோலமிட்டு வழிபடுவது அம்பிகையின் மனதை மகிழ செய்து, ஆரோக்கியம் பெருகி, எந்த குறையும் ஏற்படாது என்பது ஐதீகம். SHARE.
Similar News
News November 10, 2025
பாஜகவிற்கு ஆதரவு இல்லை.. வெளிப்படையாக அறிவிப்பு

நாங்கள் எப்போதும் ஒரு தனிப்பட்ட கட்சியையோ, அரசியல் தலைவரையோ ஆதரிப்பதில்லை என RSS தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். நாங்கள் ராமர் கோயிலை கட்ட விரும்பினோம், அதனால் தான் பாஜகவை ஆதரித்தோம். ஒருவேளை காங்கிரஸ் கட்சி ராமர் கோயிலை கட்ட விரும்பியிருந்தால், அக்கட்சியை ஆதரித்து இருப்போம் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், கொள்கைக்குதான் ஆதரவு, கட்சிக்கு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
News November 10, 2025
விநாயகர் போல் காட்சி அளிக்கும் முருகர் கோயில் மலை

தென்காசி மாவட்டம், கடையம் பகுதியில் தோரணமலை முருகன் கோயில் அமைந்துள்ளது. இந்த மலையானது பார்ப்பதற்கு யானை உட்கார்ந்த நிலையில், துதிக்கையால் நிலத்தில் ஊன்றியிருப்பது போல் இருக்கும். முருகன் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் இரு கைகளை உடைய சாத்வீக மூர்த்தியாக கையில் வேலுடன், மயில் வாகனத்தில் காட்சியளிக்கின்றார். தொழில் வளம் சிறக்க, குடும்ப பிரச்சனை தீர பக்தர்கள் முருகனை வணங்கி செல்கின்றனர்.
News November 10, 2025
Bussiness Roundup: EV கார் விற்பனை 57% அதிகரிப்பு

*அக்டோபரில் மின்சார கார்கள் விற்பனை 57.50%ஆக உயர்வு. *மத்திய அரசு அலுவலகங்களில் சேகரித்த பழைய பொருள்களை விற்றதன் மூலம் ₹800 கோடி வருவாய். *நாட்டில் நிலக்கரி உற்பத்தியை, அடுத்த ஆண்டில் 875 டன் வரை அதிகரிக்க திட்டம். *அந்நிய செலாவணி கையிருப்பு ₹61 லட்சம் கோடியாக சரிவு. *2030-க்குள் இந்தியாவின் டீப் -டெக் சந்தை மதிப்பு ₹2.66 லட்சம் கோடியாக உயரும் என தகவல்.


