News August 7, 2025
போராட்டம் தொடரும்: தூய்மை பணியாளர்கள் அறிவிப்பு

பணி நிரந்தரம் செய்யக்கோரியும், தனியார்மய நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தூய்மைப் பணியாளர்கள் 6-வது நாளாக சென்னையில் போராட்டம் நடத்துகின்றனர். இவர்களுடன் அமைச்சர்கள் K.N.நேரு, சேகர் பாபு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது. தனியார்மயமானால் பணியாளர்களுக்கு ஊதியம் குறையும் எனக் கூறிய போராட்டக்குழு ஆலோசகர் குமாரசாமி, அரசு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த ஒத்துக்கொண்டதாகவும் கூறினார்.
Similar News
News August 7, 2025
யாருக்காகவும் கிரிக்கெட் நிற்காது: கங்குலி

டெஸ்ட், டி20 -களில் ஓய்வு அறிவித்த வீரர்கள் ODI-ல் விளையாடுவார்களா என்பது குறித்து கங்குலி கருத்து தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் யாருக்காகவும் நிற்காது எனவும், கவாஸ்கர் சென்ற பிறகு சச்சின் வந்தார், டிராவிட், சேவாக், லக்ஷ்மனுக்கு பிறகு கோலி உதித்தெழுந்தார். தற்போது ஜெய்ஸ்வால், பண்ட், கில் இருக்கின்றனர். உள்ளூர் போட்டிகளால் இந்திய கிரிக்கெட் வலுவாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
News August 7, 2025
திருப்பூர் SSI படுகொலை: இருவர் கைது

திருப்பூர் உடுமலை அருகே சிக்கனூத்துவில் தந்தை – மகன்களுக்கு இடையிலான சொத்து தகராறை <<17316893>>விசாரிக்க சென்ற சிறப்பு எஸ்.ஐ சண்முகவேல் படுகொலை செய்யப்பட்டார்<<>>. இக்கொலை வழக்கில் 3 பேர் தேடப்பட்டு வந்த நிலையில், மூர்த்தி மற்றும் அவரது மகன் தங்கப்பாண்டியை மாவட்ட எஸ்.பி அலுவலகம் அருகே போலீசார் கைது செய்துள்ளனர். இக்கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மற்றொரு மகன் மணிகண்டனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
News August 7, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஆகஸ்ட் 7) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.